பக்கங்கள்

கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 22 டிசம்பர், 2009

எ.பி.க

நேற்று இரவு பெய்த அதே மழை
இன்றும் பெய்கிறது
நீ தொட்டுணர்ந்த ஈரத்துளி
இக்கணம் நதியில் கலக்கிறது
நீ அளித்த சிறிய பிரியங்கள்
வாழ்வில் உறைகிறது
நெஞ்சின் கூட்டிலிருந்து
புறப்பட்ட ஒற்றை வார்த்தை
ஏனோ உன் தனி அறையில்
அலைந்து கொண்டிருக்கிறது...


வோட்டு போடலாமே...

திங்கள், 30 நவம்பர், 2009

காதலாகிப் பேசுகிறேன்..





நீ
கவலைப்படுகிறாய்!
இப்போது பார்
கவலைகளுக்கும்
கவலை
பிடித்துவிட்டது...


சேமித்து
வைத்த
என் சின்ன
சின்ன
கவிதைகள் கூட
என்னைப்
பார்த்துச்
சிரிக்கின்றன...
உனக்குப்
பிடிக்காதவை
எல்லாம்
எப்படிக்
காவிதையாகும்
என்று...


உனக்கு
பிடிக்கும்
என்பதால்
எனக்குப்
பிடித்தது
ஏராளம்..
உனக்குப்
பிடிக்காது
என்பதால்
எனக்குப்
பிடிக்காததும்
ஏராளாம்
என்னையும்
சேர்த்து..


ஒற்றை
உரசலில்தான்
பற்றிக் கொள்கிறது
காதலும்
தீக்குச்சியும்
எல்லோரையும்
இறுதியில்
சாம்பலாக்கிவிட ...

புதன், 25 நவம்பர், 2009

 யட்சி.
வினோத ஒலி எழுப்பும்
இம்மெளனத்தின் நீட்சி
முடிவில்லா துயரத்தை தருகிறது.
காற்றின் ஓசை மரணித்த
பின்பொழுதுகள்
சிறுமணலாய் உதிர்க்கின்றன
என் இருத்தலை.
நினைத்தவுடன் உருமாறி
பறவையாகும்
மனதின் சிறகடிப்புச்சத்தத்தில்
உயிர்த்தெழுகிறாள் எனக்குள்
வசிக்கும் யட்சி.
நீங்குதல்....
ஒரு புன்னகையை
கொல்வது போல்
ஒரு தவிர்த்தலை
எதிர்கொள்வது போல்
ஒரு உறவை
முறிப்பதுபோல்
கொடூரமானதும்
துயரமானதும்
வேதனையானதும்
தான்
இந்த வலியை
வார்த்தைப்படுத்துவதும்.