பக்கங்கள்

விமர்சனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விமர்சனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 12 டிசம்பர், 2009

வேட்டைகாரன் திரைவிமர்ச்சனம்

இன்றுமட்டும் நான் இணையத்தில் படித்த வேட்டைகாரன் பற்றிய தொகுப்பு சிறுபார்வை

கணேஷ் கிறுக்களிள் இருந்து                          


தமிழர் பதிவில் இருந்து

காங்கிரஸுடன் ரகசிய உறவு வைத்துக் கொண்டுள்ள இவன் வேட்டைக்காரனள்ள இவன் ஒரு பிச்சைக்காரன், அரைவேக்காட்டு மடையன்

தமிழ் உறவுகளே! இந்த அரைவேக்காட்டு மடையனின் படங்களை புறக்கணிக்கவும் !!!
--------------------------------------------------------------------------------------------------------------------

வேட்டைக்காரன் படத்துக்கு மீண்டும் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த முறை உள்ளூரில் அல்ல... வசூலுக்கு பெரிதும் நம்பியிருக்கும் வெளிநாடுகளிலிருந்து.

காங்கிரஸுடன் ரகசிய உறவு வைத்துக் கொண்டு, ஒப்புக்காக ஈழத் தமிழர்களுக்கு ஆதரவளிப்பதாக நாடகமாடிய விஜய்யின் வேட்டைக்காரனைப் புறக்கணிப்போம் என ஈழத் தமிழர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

மேலும் இலங்கை ராணுவத்துக்கு வன்னிப் போர் காலத்தில் பாடல்கள் உருவாக்கிய ராஜ் வீரரத்னே என்பவருடன் இணைந்து பணியாற்றும் விஜய் ஆண்டனி, இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

தமிழ் உணர்வுக்கு எதிரான ஒரு சிங்களப் பாடலின் மெட்டையும் அப்படியே வேட்டைக்காரனில் பயன்படுத்தியுள்ளார். எனவே இந்தப் படத்தை அனைத்து தமிழர்களும் புறக்கணிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

படம் வெளியாக இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் கிளம்பியுள்ள இந்த எதிர்ப்பு விஜய் தரப்பை அதிர வைத்துள்ளது.

இந்த எதிர்ப்பு கோஷத்தை தமிழர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகவும், துண்டுப் பிரசுரங்களாகவும் புலம்பெயர்த் தமிழர்கள் அனுப்பி வருகின்றனர்.


மீனகம் இணையத்தில் இருந்து

“வேட்டைக்காரன்” சூடு சுறணையின்றித் தமிழன் பார்த்து ரசிப்பானா? பிய்ந்த செருப்பால் அடிப்பானா?: சுவிஸ் இளையோர் பேரவை

பதிந்தவர்_கனி
boycott_traitor_filmவிஜயின் வேட்டைக்காரன் திரைப்படத்தை புறக்கணிக்க வேண்டி சுவிஸ் தமிழ் இளையோர் பேரவை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அதன் முழு வடிவம் கீழே தரப்பட்டுள்ளது:
தமிழனை வேட்டையாடியவர்களுடன் கொண்டாடி மகிழ்பவர்கள் தயாரிப்பில் வேட்டைக்காரன். சூடு சுறணையின்றித் தமிழன் பார்த்து ரசிப்பானா? பிய்ந்த செருப்பால் அடிப்பானா?
எமது அன்புக்கும் மதிப்புக்குமுரிய சுவிஸ் வாழ்த் தமிழ் மக்களே!
வருகின்ற 19 ஆம் 20 ஆம் திகதிகளில் வேட்டைக்காறன்; எனும் திரைப்படம் சுவிஸ் எங்கும் திரையிடப்படுவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். உங்களுடைய பொழுதுபோக்கை தடுக்கும் நோக்கத்துடன் உங்கள் பாசத்துக்குரிய தேசப்பற்றுள்ள பிள்ளைகளாகிய நாம் இவ் பகீரங்க அறிவிப்பை கோரிநிக்கவில்லை.
மாறாக உங்களது பொழுதுபோக்கு எமது இனஅழிக்கக் காரணமாக இருந்துவருபவர்களுக்கு வருமானம் பெற்றுக்கொடுப்பதையே எம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நினைத்துப்பாருங்கள் மே 18 ஐ. எம் உறவுகளின் இரத்த ஆறு ஓடியபோது, கிழிந்து தொங்கிய உடல் உறுப்புக்களுடன் எவருமே எம்மைக் காப்பாற்ற வரமாட்டாரா என்று கதறியபோது தமிழகத்தின் அமாவாசை கருணாநிதி தனது கதிரை மோகத்தில் எமது உறவுகளைக் கைகழுவி விட்டான். எமது உறவுகளின் பிணங்களின் மேல் சிம்மாசனமிட்டிருந்தான்.
இச் சதிகாறக் குடும்பத்தின் நிறுவனமான “சண்” நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவரும் இத்திரைப்படத்தை மானமுள்ள இத் தமிழ்ச்சாதி பார்க்குமா? எமது தமிழக மீனவர்களைக் எப்பொழுது சிங்கள இனவெறியர்கள் கொல்லத் தொடங்கினார்களோ அப்பொழுதே தொலைந்தது இந்திய இறையாண்மை. அப்படி இல்லாத இறையாண்மைக்காக தமிழரின் இறைச்சித் தசைகளை வேட்டையாடி கசாப்புக்கடை நடத்தியவர்களுக்கு அழிவாயுதம் கொடுத்த காங்கிரஸ் ஆட்சியின் கொள்கை வேட்டைக்காரன் இளையதளபதி என்பவருக்கு பிடித்துக்கொண்டுள்ளதாம்.
இனப்பற்றும், மண்பற்றும் உள்ள எமது தமிழ்ச்சமுதாயமே, ஆற்றலும் அறிவுமிக்க எமது இளையோர்களே இவ் அநியாயத்தைத் தட்டிக்கேழுங்கள். அது ஒருபுறமிருக்கு எம்மினத்தை வேட்டையாடி, எம் தாய்நாட்டை ஆக்கிரமித்து, தமிழ்த்தாயை மானபங்கப்படுத்தி, எமது உறவுகளை சிறைப்பிடித்தவர்களுக்கு களைப்பாற்றிக் கூத்துப்போட இத்திரைப்படத்தின்; இசையமைத்துள்ள விஜை அன்ரனி வெற்றிப்பாடலுக்கு இசையமைத்துக் கொடுத்துள்ளார்.
பாருங்கள் எமது அன்புக்கினிய உறவுகளே. ஒரு சதிகாறக் கும்பலே இத்திரைப்படத்தில் இணைந்துள்ளது. எம்மை வேட்டையாடியதால் தான் வேட்டைக்காறன் என்று பேயர் சூட்டினார்களோ தெரியவில்லை. மொத்தத்தில் வேட்டைக்காரன் தமிழனை வேட்டையாடியவன் என்பதே உங்கள் பிள்ளைகளின் பொருள்.
தமிழ்த் தேசியம் வாழுகிறதென்றால்; மானமுள்ள தமிழ்ச்சாதி வாழ்கிறதென்றால் இனி எவருமே எமது தலையில் மிளைகாயை அரைக்க முடியாது என்பதை வேட்டைக்காரனை வேட்டையாடி நிரூபித்துக்காட்டுங்கள்.
உங்கள் பிள்ளைகளாகிய நாம் மிகப்பெரும் விடுதலைக்கான பணியை சுமக்க ஆரம்பித்துள்ளோம். எம்மினத்தை பாதிக்கும் எவ்விடயமாகவிருந்தாலும் தட்டிக்கேட்கும் பணியை எம்மிடம் நீங்கள் கையளித்துள்ளீர்கள். அதை நாம் சரிவர முன்னெடுக்கவேண்டியது எமது கடமையாகும்.
உங்கள் பிள்ளைகளின் அன்பான வேண்டுகோளை ஏற்றுக்கொள்வீர்கள் என்று சந்தேகத்திக்கிடமின்றி நம்புகிறோம்.
வாழ்க தமிழ்த்தேசியம்.
தமிழ் இளையோர் பேரவை – சுவிஸ்

வெள்ளி, 13 நவம்பர், 2009

மாயன் காலண்டர்.. தற்போது பலர் மனதில் பீதியை கிளப்பிக்கொண்டிருக்கிறது.

ஆதி மனித சமூகமாகிய மாயன் சமூகத்தின் சுழற்சி நிகழ்வுகளின் நாட்காட்டி. உலகின் மூலைகள் எங்கும் மக்களிடம் ஆவலையும் விளிப்பையும் ஏற்படுத்தியிருக்கின்றது .

இறுதியாக 5,125 ஆண்டுகளுக்கு முன் புதுப்பிக்கப்பட்டிருக்கின்றது மாயன் நாட்காட்டி குறிப்பிடும் இம்மனித சமூகம்.. அடுத்தது 2012 டிசம்பர் 21 மாயன் குறிப்பிடும் இந்நாள் பேரழிவுகளுடன் புவி முடிவுக்கு வருகின்றது.ஆதி எகிப்பதிய மக்களால் கூட 2012 ஓர் பாரிய மாற்றத்திற்கான ஆண்டாக எதிர்பார்க்கப்பட்டிருக்கின்றது.

புவியின் துருவப்படுதிகள் இடமாறுவதனால் புவியில் உலகளாவிய பாரிய இயற்கை பேரிடர்கள் ஏற்பட்டும் வெளிக்கிழம்பும் எரிமலை புகை மற்றும் புழுதிகளால் ஏறக்குறை 40 வருடங்களுக்கு சூரியனை பார்ப்பதே இயலாது போகும் என்கின்றனர் மாயன் நாட்காட்டியை நம்புகின்றவர்கள்..

இவற்றை எல்லாம் மறுக்கும் இன்னொரு பகுதயினர் புவியின் முடிவு என்பது சாத்தியமற்ற ஓர் விடையம் சிலவேளைகளில் புதிய யுகம் ஒன்று தோன்றக்கூடும் என்கின்றனர். ஏரிமலை வெடிப்புக்கள், நிலநடுக்கங்கள், சுனாமி, சூறாவளி என ஏற்படும் அனர்த்தங்களினால் மனித சமூகத்தின் பேரழிவு ஒன்று ஏற்படும் என கூறுகின்றது மாயன் நாட்காட்டி.

இந்த உலக உருண்டை சுழல்வது குறைந்து,நின்று பிறகு எதிர் திசையில் சுழலுமாம்.பூமியின் வட துருவம் தெற்காகி ,தென் துருவம் வடக்காகும்,இதனால் பூமியில் பேரழிவு ஏற்படும். இந்த பேரழிவு ஒட்டு மொத்த உலகத்தையும் ஆட்கொண்டு விடும்.பிறகு மறுபடியும் முதலிருந்து உயிர்களின் சுழற்சி தொடங்கும்.

தொன்மையான இனமான மாயன்கள் கூறும் இந்த கருத்தை பற்றிய பயம் பல்வேறு தரப்பினரும் கொண்டது.ஆனால் இந்த இன மக்கள் நாளடைவில் நாகரிக சமுதாயத்தில் ஐக்கியமாகி விட்டார்கள்.உலக பேரழிவு என்பதை விவிலியமும்,கொரானும் 2012 வில் நடக்க கூடியது என கூறியுள்ளதாகவும் பல தரப்பினரும் கூறுகிறார்கள்.

இந்த விஷயத்தை பற்றிய விவாதம் வலையில் மட்டுமன்றி ,டீ கடை அரட்டைகளில் கூட காரசாரமாய் நடந்து கொண்டிருக்கிறது.எதிலும் ஒரு இலாபம் பார்த்து விட நினைக்கும் வெள்ளைக்காரன் இதிலும் ஒரு அருமையான வியாபாரம் செய்திருக்கிறான்.

இதை வியாபரமென்றாலும்,பல தரப்பையும் எளிதில் சென்றடையும் மீடியாவான சினிமாவில் சொல்லியிருப்பது....பலரையும் ரூம் போட்டு யோசிக்க வைத்திருக்கிறது. ஹாலிவுட்டின் பிரபல இயக்குனர் ரோலந்த் எம்ரிச், மாயன்கள் கூறும் கருத்தை கொண்டு ,உலகம் அழிந்தால் எப்படியெல்லாம் அழியும் என காட்சிப்படுத்தியிருக்கிறார்.

இந்தியாவின் நாகாவில் உள்ள ஒரு சுரங்கத்தில் பூமியின் திடீர் அபரிமித வெப்பத்தை நண்பர் ஒருவர் உறுதி செய்ய , வழக்கம் போல் அமெரிக்கர் ஒருவரால் அந்நாட்டு அதிபருக்கு சொல்லப்படுகிறது. தொடர்ந்து வரும் பேரழிவுக்காட்சிகள்,யாரையும் பதறவைத்துவிடும்.

பூமிப்பிழவு,எரிமளைவெடிப்பு,கடலே இடமாறும் அற்புத சுனாமி என படு த்ரில்லிங்காக போகிறது.வழக்கம்போல பணக்காரர்கள் மட்டும் பணம் கொடுத்து பேரழிவிலிருந்து தப்பிக்க முயல்வதும், இல்லாதப்பட்டோருக்காக ஒருவர் குரல் கொடுப்பதும் நமது வாழ்வில் காணும் யதார்த்தங்கள்.எரிமலை வெடிக்கும் பேரழிவை ,செத்து விடுவோம் என்று தெரிந்தும் ,கண்டு ரேடியோவில் வர்ணனை செய்யும் கதாபாத்திரம் சிலிர்க்கச்செய்கிறார்.

பேரழிவிலிருந்து தப்பிக்க நடுத்தர வசதியுடைய எழுத்தாளர் படும் கஷ்டங்களை அதிகம் சொல்லியிருந்தாலும்,பேரழிவில் சிக்கி சின்னாபின்னமாகும் சாமானியர்களை பற்றி சொல்ல மறந்துதான் போய்விட்டாரோ.

இப்படியொரு பேரழிவு நடந்தால் ... நடக்கிறதோ இல்லையோ ரோலன் எம்ரிச் காட்டில் பணமழை நிச்சயம்.பல லாஜிக் மீறல்கள் இருந்தாலும் மறந்து விட்டு ஒரு முறை பார்க்கலாம்.

படம்பார்த்து விட்டு வெளியே வரும்போது ஒருவர் இன்னொருவரிடம் கேட்டுக்கொண்டிருந்தார் "ஆமா உலகம் அழியுமா?அழியாதா?

யாருக்குத்தெரியும்,இப்போது.?2012 ல் தெரிந்து விடும் மாயன் காலண்டர் உருவாக்கியது மாயையா? இல்லை மாயன்கள் தெறமையான பயபுள்ளைக தானா என்று. விமர்சனம்