பக்கங்கள்

புதன், 25 நவம்பர், 2009

 யட்சி.
வினோத ஒலி எழுப்பும்
இம்மெளனத்தின் நீட்சி
முடிவில்லா துயரத்தை தருகிறது.
காற்றின் ஓசை மரணித்த
பின்பொழுதுகள்
சிறுமணலாய் உதிர்க்கின்றன
என் இருத்தலை.
நினைத்தவுடன் உருமாறி
பறவையாகும்
மனதின் சிறகடிப்புச்சத்தத்தில்
உயிர்த்தெழுகிறாள் எனக்குள்
வசிக்கும் யட்சி.
நீங்குதல்....
ஒரு புன்னகையை
கொல்வது போல்
ஒரு தவிர்த்தலை
எதிர்கொள்வது போல்
ஒரு உறவை
முறிப்பதுபோல்
கொடூரமானதும்
துயரமானதும்
வேதனையானதும்
தான்
இந்த வலியை
வார்த்தைப்படுத்துவதும்.