பக்கங்கள்

வியாழன், 31 டிசம்பர், 2009

முடியால வலிக்குது



New-year.in Myspace New Year Graphics






2010வந்துருச்சு சரக்கு விலை ஏரிபோச்சு வேட்டைகாரனும் வந்துருச்சு ஒரே சோகம் தான் போங்க கலைஞர் இன்னும் சாகல தமிழ் ஈழம் இன்னும், பொறக்கல ஆனா 2010 வந்துருச்சு சோகமான 2010 எப்படி நாம வரவேற்கிறது
ஒரே அழுகாட்ச்சி தான் போங்க இருந்தாலும் காப்பி நியூவ் யியார்ங்கோ........
அழுகை அன்புடன் ராஜேஷ்

வெள்ளி, 25 டிசம்பர், 2009

மன்னார்குடி பாகம் 3

அன்பு நண்பர்களே ஆருயுர் தோழர்களே ,பதிவுலக பெருமக்களே இதோ மன்னார்குடி பாகம் 3
இது ஒரு புகைபட காணொளி தொகுப்பு

இந்த வரைபடம் எங்கள் ஊரை சுற்றிஉள்ள கிராமங்களின்
விபரம்





 இது இராஜகோபால சுவாமி திருக்கோவிலின் திரு தோற்றம்


இராஜ கோபுர தரிசனம்


 இது திரு தேர் பங்குனிமாதம்  நடைபெறும் திருவிழாவின் பொழுது
தேசிய மேல்நிலை பள்ளி மாணவர்களால் உற்சாகமாக இழுக்கபடும்
நானும் இழுத்திருக்கேன் சந்தோசமா இருக்கும் ம்ம்ம் ஸ்ஸ்ஸ்
ஒன்னு இல்ல பெருமூச்சு விட்டேன் 5 வருசம் ஆச்சு பாத்து.


இது எங்க கோவில் யானைங்க பார்க்க பார்க்க பரவசம் தான் போங்க இதுக்கு முன்னாடி செங்கமலம் இருந்துச்சு அது நோய்வாய் பட்டு செத்து போச்சு ஒரே சோகம் தான் போங்க அப்பறம் புதுசா ஒரு குட்டி யானை வந்துசு அதான் இது


இது தெப்பக்குளம் ரொம்ப பெருசு 6,7 வருசத்துக்கு முன்னாடி தூர்வாருனங்க
இதுல ஒருகரைல இருந்து மையமண்டபத்துக்கு போட்டி வச்சு நீந்தியே போவோம் அப்ப நான் தான் கடைசிசிசிசி......

 



 
அப்பறம் இங்க இரண்டு கல்லூரி இருக்குங்க 1 அரசு கலை கல்லூரி
2 தனியார் கல்லூரி
எங்க கோவில் 18 நாள் திருவிழா மற்றும்கோவில் உள்,வெளிதோற்றம் பற்றிய காணொளி பாருங்க







இப்போதைக்கு இதான் அப்பறம் மிச்சத பார்ப்போம் சரியா...
மறக்காம ஒட்டு குத்துங்க உங்க கிட்ட ஏதாவது கருத்து இருந்த சொல்லுங்க இல்லாடியும் சொல்லுங்க ஒகே தான..

வியாழன், 24 டிசம்பர், 2009

விஜய் சூப்பர் காமெடி












இணையத்தில் கண்ட உண்மை முடியலடா சாமி
முடிஞ்சா ஓட்டு போடுங்க..

செவ்வாய், 22 டிசம்பர், 2009

எ.பி.க

நேற்று இரவு பெய்த அதே மழை
இன்றும் பெய்கிறது
நீ தொட்டுணர்ந்த ஈரத்துளி
இக்கணம் நதியில் கலக்கிறது
நீ அளித்த சிறிய பிரியங்கள்
வாழ்வில் உறைகிறது
நெஞ்சின் கூட்டிலிருந்து
புறப்பட்ட ஒற்றை வார்த்தை
ஏனோ உன் தனி அறையில்
அலைந்து கொண்டிருக்கிறது...


வோட்டு போடலாமே...

வெள்ளி, 18 டிசம்பர், 2009

வேட்டைகாரன் நான் சேட்டைகாரன்




அண்ணா வோட்டு பொடுங்னா முடிஞ்சா திட்டிட்டு போங்னா

புதன், 16 டிசம்பர், 2009

விஜய் படத்தில் நடிக்கத்தடையா??






மறக்காம
வோட்டு போடுங்க எசமா

சனி, 12 டிசம்பர், 2009

மன்னார்குடி பாகம் 2

வாங்க மன்னார்குடி பாகம் 2க்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்

 எங்க ஊரின் அமைவிடம் 10.67° N 79.43° E

ஆகும்.  கடல் மட்டத்தில் இருந்து எங்கள் ஊர் சராசரியாக 6 மீட்டர் (19 அடி) உயரத்தில் இருக்கின்றது.
எங்க ஊரில் மொத்தம் 24 குளம் இருந்ததா பெரியவங்க சொல்வாங்க
ஆனா இப்ப பாதிக்குமேல இல்ல அதமட்டும் உறுதியா சொல்லமுடியும்
ஒரு காலத்துல எங்க ஊர்ல தண்ணிபஞ்சம் தலைவிரிச்சு ஆடுச்சாம்
அப்போதய மன்னர் ஊர் சுத்தி குளம் வெட்ட உத்திரவு பிறப்பித்தாக
தகவல்
ஊர் மக்கா பத்தி சொல்லாம இருப்பேன?

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 61,588 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். மன்னார்குடி மக்களின் சராசரி கல்வியறிவு 79% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 84%, பெண்களின் கல்வியறிவு 74% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. மன்னார்குடி மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.கணக்கெடுப்பு பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 20, 2006.
2009 தகவல் கைவசம் இல்லை
ஊர்ல நமக்கு சங்கம் 2,3 இருக்கு அது ஒரு இடம் டீ
கடை பெயர் நேதாஜி டீகடை
தினமணி செய்திதாள்ல கூட அதபத்தி செய்தி வந்துச்சு


ஓரு டீ போடும் தொழிலாளி ஒரு நாளில் எத்தனை டீ தயாரிக்கமுடியும்? ஒருங்கிணைந்த திருவாருர் மாவட்டம் மன்னார்குடியைச்சேர்ந்த டீ போடும் தொழிலாளி ஒரு நாளில் 5000 டீ போடுவதாக தினமணியில்
செய்தி வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டிலேயே அதிகமாக டீ போடும் அந்த தொழிலாளியின் பெயர் நேதாஜி. ஒரு நாளைக்கு 5000 டீ
போடுவது பெரிய செய்தியில்லை அவருக்கு. அந்த 5000 டீயையும் ஒரே ருசியுடன் தருவதுதான் செய்தி.
அவருடைய டீக்கடை அதிகாலை நான்கு மணிக்கு திறக்கப்படுகிறது. நண்பகலில் சற்று ஓய்வு. பிறகு சதா
சர்வ நேரமும் டீ...டீ...டீ..தான்.
மற்ற கடைகளைவிட இவருடைய கடையில் டீயின் விலை 50 பைசா கூடுதல். கூட்டத்துக்கு குறைவில்லை.
"கறவைப்பால் மட்டும் வாங்குகிறோம். இரண்டு அடுப்பு இருக்கும். ஒன்று தண்ணீர் கலக்காத பால் கொதிக்க.
இன்னொன்றில் ஒன்றுக்கு மூன்று என்கிற கணக்கில் தண்ணீர் கலந்த பால் கொதித்துக்கொண்டிருக்கும். டிக்காக்க்ஷனை தண்ணீரில் போடமாட்டோம். இரண்டாவது பாலில் போடுவோம். டிக்காக்க்ஷன் தயாரானதும் பழுக்கக்காய்ச்சிய முதல் பாலை சேர்த்தால் நேதாஜி பிராண்ட் டீ தயார்" என்கிறார்.
டீத்தூள் அதிகம் வேகக்கூடாதாம். பாலை நன்கு கொதிப்பேற்ற வேண்டுமாம். நல்ல டீ போட விரும்புவோருக்கு நேதாஜி தரும் டெக்னிகல் அட்வைஸ்.
நீங்கள் அவருடன் பேசிக்கொண்டிருந்தால் வரிசையில் கடைசி இடம்தான் உங்களுக்கு. பேசுவதை நிறுத்திவிட்டு வரிசையில் போய் நின்று கொள்ளுங்கள்.
நன்றி:தினமணி

 அப்புறம் இனிப்பு கடை அங்க நமக்கு சங்கம் இல்ல ஆனா டில்லி ஸ்விட் கடை இருக்கு அதபத்தி சொல்லனும்னா
மனிதன் என்றால் ஆள் பாதி ஆடை பாதி என்பதுபோல் முந்திரி அல்வா என்றால், அல்வா பாதி முந்திரி பாதி. ஒரு கடிக்கு முந்திரியும் மறு கடிக்கு அல்வாவும் பல்லில் சிக்கும்; இரண்டும் சேர்ந்து ஒன்றாய் கரைந்து உள்ளே போகும் ருசியே அலாதிதான்!
அந்தக் காலம் தொட்டு மன்னார்குடியில் மட்டும் இந்த ருசி கிடைப்பதற்கு பாமணியாற்றுத் தண்ணீரும் ஒரு காரணம் என்கிறார்கள் உள்ளூர்க்காரர்கள்.
மன்னார்குடி அல்வா வரலாற்றில் ஒரு வினோதம் இருக்கிறது. அல்வாவில் அக்காலத்து ருசி அப்படியே இருந்தாலும் அல்வா விற்பவர்கள் ஒரே ஆட்கள் இல்லை என்பதுதான் அது. காலம் மாறும்போதெல்லாம் இங்கு அல்வா கடைக்காரர்களும் மாறுகிறார்கள்.
ஆனால், அந்த ருசி மட்டும் ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு கடைக்கு வாய்க்கிறது. அதிலும் ஒரு வேடிக்கை – இப்படி பேர் வாங்குகிறவர்கள் வெளியூர்காரர்களாக இருப்பது.
அந்த வகையில் இந்தத் தலைமுறையில் அந்த ருசி “டெல்லி ஸ்வீட்ஸ்’ கடைக்காரர்களுக்குக் கிட்டியிருக்கிறது. ருசியைப் பிடித்தது எப்படி? கடை உரிமையாளர் விழுப்புரம் யுவராஜ் சொல்கிறார்:
“”இரு பங்கு கோதுமை, மூன்று பங்கு ஜீனி, ஒரு பங்கு முந்திரி, அரை பங்கு எண்ணெய், அரை பங்கு நெய், இன்னும் சில இத்யாதிகள். இவை இருந்தால் மன்னார்குடி அல்வாவைச் செய்துவிடலாம். ஆனால், கோதுமைப் பால் எடுப்பதில் தொடங்கி முந்திரியைப் போட்டு கிளறுவது வரை அது அதற்கான பக்குவத்தைக் கையாள வேண்டும். அதில்தான் இருக்கிறது வித்தை.
சரியாக 6 மணி நேரம் கோதுமையை ஊற வைக்க வேண்டும். ஒரு பங்கு கோதுமையில் அரை பங்கு பாலுக்கு மேல் எடுக்கக் கூடாது. அல்வாவில் எண்ணெய் அதிகம் இருந்தால் சுவை கொடுக்காது; முழுக்க முழுக்க நெய்யில் செய்தால் பதம் கொடுக்காது. இந்த இரண்டையும் சரி சமமாய் கலக்க வேண்டும்.
மன்னார்குடி அல்வாவுக்கு நாக்குப் பதம் கிடையாது; கைப்பதம்தான். பாகும் பாலும் சேர்ந்து கூடும்போது அல்வாவை எடுத்து உள்ளங்கையில் போட்டால் உருளைப்போல் உருள வேண்டும். உருண்டால் அது மன்னார்குடி பாணி அல்வா”
இன்னும் நிறைய இருக்கு அடுத்த பாகத்தில் பார்போம் மறக்காம்
ஓட்டு பொடுங்க பின்னுட்டம் இடுங்க
பதிவ படிச்சவங்க அனைவருக்கும் நன்றி..

வேட்டைகாரன் திரைவிமர்ச்சனம்

இன்றுமட்டும் நான் இணையத்தில் படித்த வேட்டைகாரன் பற்றிய தொகுப்பு சிறுபார்வை

கணேஷ் கிறுக்களிள் இருந்து                          


தமிழர் பதிவில் இருந்து

காங்கிரஸுடன் ரகசிய உறவு வைத்துக் கொண்டுள்ள இவன் வேட்டைக்காரனள்ள இவன் ஒரு பிச்சைக்காரன், அரைவேக்காட்டு மடையன்

தமிழ் உறவுகளே! இந்த அரைவேக்காட்டு மடையனின் படங்களை புறக்கணிக்கவும் !!!
--------------------------------------------------------------------------------------------------------------------

வேட்டைக்காரன் படத்துக்கு மீண்டும் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த முறை உள்ளூரில் அல்ல... வசூலுக்கு பெரிதும் நம்பியிருக்கும் வெளிநாடுகளிலிருந்து.

காங்கிரஸுடன் ரகசிய உறவு வைத்துக் கொண்டு, ஒப்புக்காக ஈழத் தமிழர்களுக்கு ஆதரவளிப்பதாக நாடகமாடிய விஜய்யின் வேட்டைக்காரனைப் புறக்கணிப்போம் என ஈழத் தமிழர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

மேலும் இலங்கை ராணுவத்துக்கு வன்னிப் போர் காலத்தில் பாடல்கள் உருவாக்கிய ராஜ் வீரரத்னே என்பவருடன் இணைந்து பணியாற்றும் விஜய் ஆண்டனி, இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

தமிழ் உணர்வுக்கு எதிரான ஒரு சிங்களப் பாடலின் மெட்டையும் அப்படியே வேட்டைக்காரனில் பயன்படுத்தியுள்ளார். எனவே இந்தப் படத்தை அனைத்து தமிழர்களும் புறக்கணிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

படம் வெளியாக இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் கிளம்பியுள்ள இந்த எதிர்ப்பு விஜய் தரப்பை அதிர வைத்துள்ளது.

இந்த எதிர்ப்பு கோஷத்தை தமிழர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகவும், துண்டுப் பிரசுரங்களாகவும் புலம்பெயர்த் தமிழர்கள் அனுப்பி வருகின்றனர்.


மீனகம் இணையத்தில் இருந்து

“வேட்டைக்காரன்” சூடு சுறணையின்றித் தமிழன் பார்த்து ரசிப்பானா? பிய்ந்த செருப்பால் அடிப்பானா?: சுவிஸ் இளையோர் பேரவை

பதிந்தவர்_கனி
boycott_traitor_filmவிஜயின் வேட்டைக்காரன் திரைப்படத்தை புறக்கணிக்க வேண்டி சுவிஸ் தமிழ் இளையோர் பேரவை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அதன் முழு வடிவம் கீழே தரப்பட்டுள்ளது:
தமிழனை வேட்டையாடியவர்களுடன் கொண்டாடி மகிழ்பவர்கள் தயாரிப்பில் வேட்டைக்காரன். சூடு சுறணையின்றித் தமிழன் பார்த்து ரசிப்பானா? பிய்ந்த செருப்பால் அடிப்பானா?
எமது அன்புக்கும் மதிப்புக்குமுரிய சுவிஸ் வாழ்த் தமிழ் மக்களே!
வருகின்ற 19 ஆம் 20 ஆம் திகதிகளில் வேட்டைக்காறன்; எனும் திரைப்படம் சுவிஸ் எங்கும் திரையிடப்படுவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். உங்களுடைய பொழுதுபோக்கை தடுக்கும் நோக்கத்துடன் உங்கள் பாசத்துக்குரிய தேசப்பற்றுள்ள பிள்ளைகளாகிய நாம் இவ் பகீரங்க அறிவிப்பை கோரிநிக்கவில்லை.
மாறாக உங்களது பொழுதுபோக்கு எமது இனஅழிக்கக் காரணமாக இருந்துவருபவர்களுக்கு வருமானம் பெற்றுக்கொடுப்பதையே எம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நினைத்துப்பாருங்கள் மே 18 ஐ. எம் உறவுகளின் இரத்த ஆறு ஓடியபோது, கிழிந்து தொங்கிய உடல் உறுப்புக்களுடன் எவருமே எம்மைக் காப்பாற்ற வரமாட்டாரா என்று கதறியபோது தமிழகத்தின் அமாவாசை கருணாநிதி தனது கதிரை மோகத்தில் எமது உறவுகளைக் கைகழுவி விட்டான். எமது உறவுகளின் பிணங்களின் மேல் சிம்மாசனமிட்டிருந்தான்.
இச் சதிகாறக் குடும்பத்தின் நிறுவனமான “சண்” நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவரும் இத்திரைப்படத்தை மானமுள்ள இத் தமிழ்ச்சாதி பார்க்குமா? எமது தமிழக மீனவர்களைக் எப்பொழுது சிங்கள இனவெறியர்கள் கொல்லத் தொடங்கினார்களோ அப்பொழுதே தொலைந்தது இந்திய இறையாண்மை. அப்படி இல்லாத இறையாண்மைக்காக தமிழரின் இறைச்சித் தசைகளை வேட்டையாடி கசாப்புக்கடை நடத்தியவர்களுக்கு அழிவாயுதம் கொடுத்த காங்கிரஸ் ஆட்சியின் கொள்கை வேட்டைக்காரன் இளையதளபதி என்பவருக்கு பிடித்துக்கொண்டுள்ளதாம்.
இனப்பற்றும், மண்பற்றும் உள்ள எமது தமிழ்ச்சமுதாயமே, ஆற்றலும் அறிவுமிக்க எமது இளையோர்களே இவ் அநியாயத்தைத் தட்டிக்கேழுங்கள். அது ஒருபுறமிருக்கு எம்மினத்தை வேட்டையாடி, எம் தாய்நாட்டை ஆக்கிரமித்து, தமிழ்த்தாயை மானபங்கப்படுத்தி, எமது உறவுகளை சிறைப்பிடித்தவர்களுக்கு களைப்பாற்றிக் கூத்துப்போட இத்திரைப்படத்தின்; இசையமைத்துள்ள விஜை அன்ரனி வெற்றிப்பாடலுக்கு இசையமைத்துக் கொடுத்துள்ளார்.
பாருங்கள் எமது அன்புக்கினிய உறவுகளே. ஒரு சதிகாறக் கும்பலே இத்திரைப்படத்தில் இணைந்துள்ளது. எம்மை வேட்டையாடியதால் தான் வேட்டைக்காறன் என்று பேயர் சூட்டினார்களோ தெரியவில்லை. மொத்தத்தில் வேட்டைக்காரன் தமிழனை வேட்டையாடியவன் என்பதே உங்கள் பிள்ளைகளின் பொருள்.
தமிழ்த் தேசியம் வாழுகிறதென்றால்; மானமுள்ள தமிழ்ச்சாதி வாழ்கிறதென்றால் இனி எவருமே எமது தலையில் மிளைகாயை அரைக்க முடியாது என்பதை வேட்டைக்காரனை வேட்டையாடி நிரூபித்துக்காட்டுங்கள்.
உங்கள் பிள்ளைகளாகிய நாம் மிகப்பெரும் விடுதலைக்கான பணியை சுமக்க ஆரம்பித்துள்ளோம். எம்மினத்தை பாதிக்கும் எவ்விடயமாகவிருந்தாலும் தட்டிக்கேட்கும் பணியை எம்மிடம் நீங்கள் கையளித்துள்ளீர்கள். அதை நாம் சரிவர முன்னெடுக்கவேண்டியது எமது கடமையாகும்.
உங்கள் பிள்ளைகளின் அன்பான வேண்டுகோளை ஏற்றுக்கொள்வீர்கள் என்று சந்தேகத்திக்கிடமின்றி நம்புகிறோம்.
வாழ்க தமிழ்த்தேசியம்.
தமிழ் இளையோர் பேரவை – சுவிஸ்

புதன், 9 டிசம்பர், 2009

மன்னார்குடி பாகம் 1

 இன்று நான் பிறந்து தவழ்ந்து வளர்ந்து சுற்றி திரிந்த மன்னார்குடியை பற்றி உங்களுடன் பகிர்ந்து கொ(ல்)ள்ள போகிறேன்



 
மன்னார்குடி ஒரு நகரத்திற்கு சற்றும் குறைவின்றி எல்லா வசதிகளுடன், கிராமிய மணத்துடன் இருக்கும் ஒரு திருவாரூர் மாவட்ட ஊர். என்னதான் திருவாரூர் என்று சொல்லிக்கொண்டாலும் மக்கள் மனதில் இன்னும் தஞ்சாவூர்தான் விருப்பமான ஊர்.
அதிகாலையில் எழுந்துவிடும் ஊர். இன்னமும் மாட்டுவண்டிகளின் ஆதிக்கம் ரோட்டில் அதிகம் இருக்கும். 
எங்கள் ஊரின் அதிசயம் ஸ்ரீ ராஜ கோபாலஸ்வாமி திருகோவில்
மன்னை கிட்டத்தட்ட முக்கிய ஊர்களுக்கு நடுவில் இருக்கின்றது. இங்கிருந்து முக்கிய ஊர்கள் கிட்டத்தட்ட 30 முதல் 40 கிமீகளுக்குள் இருக்கின்றன என்றும் சொல்லலாம். தஞ்சை, நாகை, திருவாரூர், குடந்தை, பட்டுக்கோட்டை போன்ற ஊர்கள் அருகில் உள்ளன.
“கோயில் பாதி; குளம் பாதி”...... என்ற பழமொழிக்கு சொந்தமான ஊர் மன்னார்குடிதான்

ஊர் பெயர்காரணம்:

mannargudi Rajagopala swamy’குடி’  என்றால் கன்னடத்திலும், தெலுங்கிலும் கோயில் என்று அர்த்தம். இங்கே மன்னராகிய இராஜகோபாலசுவாமி குடியிருப்பதால் ‘மன்னார்குடி’ என்ற பெயர் வந்தது.
இது தவிர, செண்பகாரண்யம், குலோத்துங்க சோழவிண்ணகரம், வாசுதேவபுரி.... என பல பெயர்கள் உண்டு.


ஸ்தல புராணம்:

குடந்தைக்கு தென்கிழக்கே செண்பகவனம் ஒன்று இருந்தது. அங்கே 1008 முனிவர்கள் தவமியற்றி வந்தனர். அவர்களுள் தலைச்சிறந்தவராக வாஹி முனி என்னும் முனிவர் இருந்தார்.அவரு ’கோபிளர்,’ ‘கோபிரளயர்’ என இரு புதல்வர்கள். இருவரும் ஸ்ரீமன் நாரயணணை நோக்கி கடுமையான தவமியற்றி வந்தனர். அவர்களுக்கு காட்சியளித்த பெருமாள், அவர்கள் துவாரகைக்கு சென்று கண்ணபிரானை தரிசித்தால் அவர்கள் விரும்பும் மோட்சம் கிடைக்கும் என்று கூறி மறைந்தார்.
அவ்ர்களும் அதன்படியே ஒவ்வொரு புண்ணிய நதிகளிலும் நீராடியவாறு துவாரகை நோக்கி பயணித்தனர். அப்படி செல்கையில் வழியில் நாரதரை சந்தித்தனர். இவர்களது பயண நோக்கத்தை அறிந்த நாரதர், துவாரகையில் கண்ணபிரான் தான் வந்த காரியத்தை முடித்துக் கொண்டு மீண்டும் விண்ணுலகம் சென்றுவிட்டதாக கூறியதைக் கேட்ட இரு சகோதரர்களும் மூர்ச்சையடைந்தனர். அவர்களது பக்தியை கண்டு பெருமகிழ்ச்சியடைந்த நாரதர், அவர்களை செண்பகாரண்யம் சென்று அங்கு ஹரித்ராநதியில் நீராடி தவம் செய்தால் கண்ணபிரானை தரிசித்து மோட்சமும் அடையலாம் என்றார்.
இதை கேட்டு ஆனந்தமடைந்த இருவரும் அவர் சொல்படி செண்பகாரண்யம் சென்று தவமிருந்தனர். அவர்களுக்கு கிருஷ்ணராக காட்சியளித்த கண்ணபிரானிடம் அவர் துவாரகையில் நடத்திய கிருஷ்ணலீலைகளை நடத்தி காட்ட சொல்லி வேண்டினர். அதனால் கிருஷ்ணாவதாரதில் தொடங்கி, கீதோபதேசம் வரையிலான 32 லீலைகளையும் நடத்திக் காட்டினார் கண்ணபிரான்.
கிருஷ்ணரின் பெற்றோர் வாசுதேவர், தேவகி. இவ்விருவரையும் கம்சன் சிறையில் அடைத்தபோது பெருமாள் அவர்கள் முன்பு தோன்றி, தானே அவர்களுக்கு பிள்ளையாக பிறக்கப்போவதாக கூறினார். இதுவே அவரது முதல் லீலை. தனது லீலைகளை காண விரும்பிய கோபிலர்,
கோபிரளயருக்கு முதலில் வாசுதேவராக காட்சி தந்தார். 32ம் லீலையாக கோகுலத்தில் பசுக்கள் மேய்க்கும் இடையனாக காட்சி தந்தார். இந்நிகழ்வின் அடிப்படையில் இக்கோயிலில் மூலவர் "வாசுதேவர்' என்ற பெயரிலும், உற்சவமூர்த்தி ராஜகோபாலசுவாமியாகவும் காட்சி தருகிறார்.
தினமும் காலையில் வாசுதேவர் சன்னதி திறக்கும்போது பசு, யானைக்கு பூஜை செய்யப்படுகிறது. உற்சவருக்கு ராஜமன்னார் என்றும் பெயர் உண்டு. இப்பெயரே பிரசித்தி பெற்றதால்,
ஊருக்கும் "ராஜமன்னார்குடி' என்ற பெயர் ஏற்பட்டது.

ராஜகோபாலர் இக்கோயிலில் இடையன் கோலத்தில் பாலகனாக காட்சி தருகிறார். ஒரு வேஷ்டி அணிந்து அதையே தலைப்பாகையாக சுருட்டி,
வலது கையில் வெண்ணெய் மற்றும் சாட்டை வைத்து காட்சி தருகிறார். இடுப்பில் சலங்கை, சாவிக்கொத்து, கையில் வளையல், காலில் தண்டை,
கொலுசு ஆகிய "குழந்தை' அணிகலன்கள் அணிந்திருக்கிறார். உடன் ஒரு பசுவும், இரண்டு கன்றுகளும் உள்ளன. கிருஷ்ண, பலராமரை அழிக்க கம்சன்
குவலயாபீடம் என்னும் யானையை ஏவிவிட்டான். கிருஷ்ணன், யானையின் தந்தத்தை ஒடித்து அதனை அடக்கினார்.
இதன் அடிப்படையில் இவர் இடது கையில் தந்தமும் இருக்கிறது.

ஒருசமயம் கிருஷ்ணன், யமுனையில் நீராடிக்கொண்டிருந்த கோபியருக்கு இடையே ஒரு போட்டி வைத்தார். கோபியர் நீராடிவிட்டு தங்களது ஆடை,
ஆபரணங்களை சரியாக அணிந்து கொள்ள வேண்டும் என்பதே போட்டி! போட்டி துவங்கியதும், கிருஷ்ணர், ஒரு கோபியின் தாடங்கத்தை (காதணி)
எடுத்து அணிந்து கொண்டார். கோபியர்களோ அதைக் கவனிக்காமல் தேடிக் கொண்டே இருந்தனர். இறுதியில் கண்ணனின் காதில் அது இருக்கும்
அழகைப் பார்த்து நகைத்து, ஆனந்தம் கொண்டனர். இதன் அடிப்படையில் இங்கு ராஜகோபாலர் வலது காதில் குண்டலமும், இடது காதில் தாடங்கமும் அணிந்திருக்கிறார்.

32 லீலைகளில் கோபியருடன் ஜலக்ரீடை ஆடியதும் ஒன்று. அப்பொழுது கோபியர் பூசியிருந்த மஞ்சள், நதி நீரில் கலந்ததால்தான் ஹரித்ரா (மஞ்சள்) நதியென்ற பெயர் வந்ததாம்.

கோயில் வரலாறு:

இக்கோயிலின் வரலாற்று பெருமையை நாம் அறிய 1000 வருடங்கள் பின்னோக்கி செல்ல வேண்டும். இக்கோயில் ராஜேந்திர சோழனின் மகன் இராஜாதிராஜ சோழனால்
கட்டப் பட்டது.  அப்பொழுது ’இராஜாதிராஜ விண்ணகரம்’ என்று அழைக்கப்பட்டது. பின்னர் 100 ஆண்டுகள் கழித்து குலோத்துங்க சோழனால் இக்கோயில் புதுப்பிக்கப்பட்டது. இப்பொழுது இருக்கும் உட்பிரகாரம் குலோத்துங்க சோழன் காலத்தில் கட்டப்பட்டதால் இவ்வூருக்கு ’குலோத்துங்க சோழ விண்ணகரம்’
என்ற பெயரும் உண்டு.

பிறகு 16. நூற்றாண்டின் முடிவில் நாயக்கர்களின் ஆட்சிக் காலத்தில் இக்கோயில் மீண்டும் சிறப்போடு விளங்கியது. அச்சுதப்ப நாயக்கர்
என்பவரால் கருட த்வஜ ஸ்தம்பம் கட்டப் பட்டது. பின்னர் கி.பி. 1633 - 1673 ம் ஆண்டுகளில் விஜயராகவ நாயக்கரின் ஆட்சிக் காலத்தில்
வெளியே இருக்கும் பெரிய இராஜகோபுரம், ஆயிரங்கால் மண்டபம் போன்றவைக் கட்டப்பட்டது.ஸ்ரீ இராஜகோபாலசுவாமியையே தனது
குல தெய்வமாக கருதிய விஜயராகவ நாயக்கர் ‘மன்னாரு தாசன்’ என்றே அழைக்கப்பட்டார். நாட்டியம், நாடகம் போன்ற கலைகளில்
ஆர்வமுடைய விஜயராகவ நாயக்கர், தான் தெலுங்கில் இயற்றிய படைப்புகளை ஸ்ரீ இராஜகோபாலசுவாமிக்கே சமர்ப்பித்தார். அது மட்டுமின்றி
அவர் இயற்றிய பல நாடகங்களும் இந்த கோயிலின் ஆயிரம்கால் மண்டபத்திலேயே அரங்கேற்றப் பட்டது.

விஜயராகவ நாயக்கரின் ஆட்சிக் காலத்தில் இக்கோயிலுக்கு பல கோபுரங்களும், மண்டபங்களும், குளங்களும் கட்டியதால், இன்றும்
இக்கோயிலில் இராப்பத்து, பகல்பத்து உற்சவத்தின்போது ஸ்ரீ இராஜகோபாலசுவாமிக்கு விஜயராகவ நாயக்கரின் அலங்காரம் செய்து, அவரது
பெயரை கூவி கட்டியம் கூறுகின்றனர்.


உற்சவம்:

மன்னார்குடியில் ஆண்டின் 12
மாதங்களிலும் உற்சவம் நடக்கும்.



சித்திரை மாதம் - ‘கோடை உற்சவம்’- 10 நாட்கள்
வைகாசி மாதம் - ’ வசந்த உற்சவம்’ - 10 நாட்கள், 10ம் நாள் பெளர்ணமியன்று கருட வாகனம் இத்தலத்தின் சிறப்பு
ஆனி மாதம் - ‘தெப்போற்சவம்’ - 10 நாட்கள், 10ம் நாள் பெளர்ணமியன்று ஹரித்ராநதி குளத்தில் தெப்பம் நடைப்பெறும்.
ஆடி மாதம் - ‘ஆடிப்பூரம்’- 10 நாட்கள். செங்கமலத் தாயாருக்கு ஜேஷ்டாபிஷேகம் நடைப் பெறும்.
ஆவணி மாதம் -’ பவித்ரோற்சவம்’ - 10 நாட்கள்.
புரட்டாசி மாதம் - ’நவராத்திரி’ - 10 நாட்கள்.
ஐப்பசி மாதம் - கோலாட்ட உற்சவமும் தீபாவளி உற்சவமும் கொண்டாடப் படும்
கார்த்திகை மாதம்- சொக்கப் பானையுடன் கார்த்திகை உற்சவம்
மார்கழி மாதம் - ’அத்யயன உற்சவம்’ - 20 நாட்கள்.இராப்பத்து, பகல் பத்து உற்சவம்.
தை மாதம் - ‘பொங்கல் உற்சவம்’- 10 நாட்கள், தாயாருக்கும் உற்சவம் நடைப்பெறும்
மாசி மாதம் - ‘டோலோற்சவம்’ -10 நாட்கள்
பங்குனி மாதம் - ’பிரம்மோற்சவம்’ - 18 நாட்கள்.

புராண சிறப்பும், வரலாற்று சிறப்பும் கொண்ட மன்னார்குடிக்கு,பல முக்கிய ஊர்களிலிருந்தும் நேரடியாக பேருந்து வசதி உள்ளன. திருவாரூர்,
கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை போன்ற ஊர்களிலிருந்தும் சாலை வழியாக சென்றடையலாம். மன்னார்குடியின் அருகாமையிலுள்ள
ரயில் நிலையம் நீடாமங்கலம். இது 12கிமீ தொலைவில் உள்ளது.

மூலவர்: வாசுதேவப்பெருமாள்; தாயார்: செங்கமலத்தாயார்; உற்சவர்: ராஜகோபாலர்; தலவிருட்சம்: செண்பகமரம்;
தீர்த்தம்: 9 தீர்த்தங்கள்; ஆகமம்: பாஞ்சராத்ரம்; விமானம்: சுயம்பு விமானம்; புராணபெயர்: ராஜமன்னார்குடி;
ஊர்: மன்னார்குடி; மாவட்டம்: திருவாரூர்
நடை திறப்பு: காலை 6.30 - 12, மாலை 4.30 - 9 மணி.

மன்னார்குடியில் ஓரிரவு தங்கினால் ஒரு கோடியாண்டுகள் தவமியற்றியதற்கு சமம் என்கிறார்கள். இன்னும் நிறைய இருக்கு அடுத்த பதிவுல எழுதிருவோம்..
அப்ப கண்டிப்பா எங்க ஊருக்கு வாங்க அப்படியே 
மறக்கம ஒட்டு போடுங்க

செவ்வாய், 8 டிசம்பர், 2009

நீங்கள் அனுப்பிய மின்னஞ்சல் வாசிக்கப்பட்டாதா இல்லையா என்று அறிவது எப்படி



சில சந்தர்பங்களில் நாம் அனுப்பிய மின்னஞ்சல் திறந்து படிக்கப்பட்டதா அல்லது படிக்கப்படவில்லையா என்று அறிய வேண்டிய அவசியத்தில் இருப்போம் அவ்வாறு அறிவதற்கு உதவுவது தான் SpyPic என்ற இந்த இணையத்தளம். இது ஒரு இலவச சேவையாகும்.
இதன்
மூலம் நாம் அனுப்பும் மின்னஞ்சலை எந்த நாட்டில் இருந்து எத்தனை மணிக்குப்
படிக்கிறார், எத்தனை தரம் படிக்கிறார். அவர் மின்னஞ்சலை படிக்கும்
கணணியின் IP Address போன்ற தகவல்களை இந்த இணையத்தளம் உடனுக்குடன் எமக்குத்
தெரியப்படுத்தும்.

இதற்கு
நீங்கள் செய்யவேண்டியது மின்னஞ்சலை எழுதி முடிந்தவுடன் இந்த
இணையத்தளத்துக்கு சென்று உங்கள் மினஞ்சல் முகவரியையும் உங்கள்
மின்னஞ்சலுக்கான தலைப்பையும் கொடுக்க வேண்டும்

பின் Select your SpyPig tracking image என்ற இடத்தில் உள்ள எதாவது ஒரு படத்தினை தெரிவு செய்து Number of notifications to receive என்ற இடத்தில் உங்களுக்கு மின்னஞ்சல் பெறுபவர் எத்தனை முறை உங்கள்
மின்னஞ்சலைப் படிக்கும் போது உங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதனையும் தெரிவு செய்யவும்

பின் கீழ் உள்ள click to activate my spypic என்ற
Button ஐக் click செய்யவும் அப்போது கீழ் உள்ள பெடடியில் நீங்கள் தெரிவு
செய்த படம் தோன்றும் அந்த படத்தினை ஒரு நிமிடத்துக்குள் Copy செய்து
நீங்கள் அனுப்பும் மின்னஞ்சலில் ஏதாவது ஒரு இடத்தில் paste செய்து அந்த
மின்னஞ்சலை சாதரண மின்னஞ்சல் போல் அனுப்பவும். அந்த மின்னஞ்சல் திறந்து
படிக்கும் போது உங்களுக்கு தகவல் அனுப்பப்படும்.

தள முகவரி : http://www.spypig.com/

வெள்ளி, 4 டிசம்பர், 2009

பதிவு பிரபலம் ஆக..

அன்பு நண்பர்களே அருமை தோழிக ளே உங்கள் பதிவு பிரபலம் ஆக அருமையான வழி மக்களின் மனக்குமுறல்களை வெளிகொணர்தல்
எப்படி.....
ஒன்னும் பெருச இல்லங்க விஜய் அவுரு படத்தை பத்தி உங்கள் மேலான
கருத்தை பதிவா பொடுங்க

அப்பறம் கூகுலே திணரும்ல வாங்க வந்து போடுங்க பதிவ... ஒகேயா
வடிவேல், கவுண்டமணி,செந்தில் எல்லாரும் செய்ய முடியாதத நம
செய்வோம்..
நாலுபேர சிரிக்கவச்சா எதுவும் தப்பு இல்லா என்னா சொல்லுறிங்க

வியாழன், 3 டிசம்பர், 2009

விஜய் பத்தி எனக்கு வந்த எஸ்.எம்.எஸ். ஜோக்ஸ்ல லேட்டஸ்ட்

சமிபத்தில் நண்பரின் வலை பதிவில் கண்டது நமக்கு இது மாதிரி விஜய கிண்டல் பண்ணி பதிவு போடுறதுனா ரொம்ப பிடிக்கும்பா ஹைய....


விஜய் பத்தி எனக்கு வந்த எஸ்.எம்.எஸ். ஜோக்ஸ்ல லேட்டஸ்ட்:

பராக் ஒபாமா பின்லேடனைப் பிடிச்சே ஆகணும்னு தன் ராணுவத்தை முடுக்கி விட்டாரு. ஒசாமா பயந்து, எங்கே ஒளிஞ்சுக்கலாம்னு தன் உதவியாளர் கிட்டே ஆலோசனை கேட்டாரு. “வேட்டைக்காரன் ரிலீசாகப் போகுது. அந்தத் தியேட்டர்ல போய் ஒளிஞ்சுக்குங்க. ஒரு பய வரமாட்டான் அங்கே”ன்னாராம் உதவியாளர். ஒசாமா உடனே, “அடப்போய்யா! தப்பிக்கிறதுக்கு வழி கேட்டா, சாகுறதுக்கு வழி சொல்றியே!”ன்னு கடுப்பாயிட்டாராம்.

என்னைக் கடுப்பேற்படுத்தின இன்னும் சில விஜய் ஜோக்ஸ்:

1. ஒரு குரங்கு, ஒரு குருவியை மீட் பண்ணிச்சாம். “உன்ன விட நான் ஃபேமஸ்”னுச்சாம். அதுக்கு குருவி, “இல்ல. நான்தான் ஃபேமஸ். ஏன்னா, என் பேர்ல ஒரு படமே வந்திருக்கு”ன்னுச்சாம். உடனே குரங்கு, “அடப் போவியா! அந்தப் படத்துல ஹீரோவே நான்தான்!”னுச்சாம்.

2. குருவி செத்துப் போச்சு; வில்லு ஒடைஞ்சு போச்சு. வேட்டைக்காரன் வந்து மட்டும் என்னத்த வெட்டி முறிக்கப் போறான்?

3. ஒரு மரத்துல பன்னிரண்டு குருவிங்க உக்கார்ந்திருந்துச்சு. ஒருத்தன் வந்து துப்பாக்கியால அதுங்களைச் சுட்டான். எல்லாக் குருவியும் பறந்தோடிடுச்சு. ஒரே ஒரு குருவி மட்டும் ஓடாம உக்கார்ந்திருந்துச்சு. ஏன் தெரியுமா? அது விஜய்யோட ‘குருவி’!

4. நடிகர்களுக்கெல்லாம் ஒரு தேர்வு வெச்சாங்க. ‘உங்களோட ஹிட் படங்களைப் பற்றி ஒரு குறிப்பு வரைக’ என்பதுதான் கேள்வி. உடனே விஜய் எழுந்திருச்சு சொன்னாராம்... “இது அவுட் ஆஃப் சிலபஸ்!” இன்னொரு தேர்வு. அதுல கொடுக்கப்பட்ட கேள்வி: ‘உங்களோட ஃப்ளாப் படங்களைப் பற்றி விவரித்து எழுதுக.’ விஜய் மட்டும் அடிஷனல் ஷீட்ஸ் வாங்கித் தள்ளிக்கிட்டே இருந்தாராம்.

5. விஜய் படம் ஓடிட்டிருந்த தியேட்டர்ல எக்கச்சக்கக் கூட்டம். என்னடான்னு ஆச்சர்யப்பட்டுக் கேட்டான் ஒருத்தன். அதுக்கு இன்னொருத்தன் சொன்னான், “அதொண்ணுமில்லடா! இந்தப் படத்துக்கு எவனோ ரிசர்வ் பண்ண வந்திருக்கானாம். அவனைப் பார்க்கத்தான் இத்தனைக் கூட்டம்!”

6. விஜய் படம் ரிலீசாகியிருந்த தியேட்டர்ல ஈயாடிச்சு. சரியான கலெக்‌ஷனே இல்லை. தியேட்டர் ஓனர் ஒரு ஐடியா பண்ணினார். எல்லாரும் ஃப்ரீயா உள்ளே வரலாம்னு சொல்லிட்டார். ஜனங்க முண்டியடிச்சுக்கிட்டு கும்பல் கும்பலா உள்ளே போனாங்க. அதுக்கப்புறம் கதவை மூடிட்டு, “இப்ப யாராவது வெளியே போகணும்னா இத்தனை ரூபாய் கொடுக்கணும்”னு டிக்கெட் கட்டணம் வசூல் பண்ண ஆரம்பிச்சாராம். பிளாக்ல எல்லாம் வித்துப் போயி, எக்கச்சக்க வசூலை அள்ளிக் குமிச்சிருச்சாம்.

7. விஜய்: நா அடிச்சா தாங்கமாட்ட, நாலு மாசம் தூங்கமாட்ட....
ஒரு குரல்: டேய், நீ அடிச்சாக்கூட பரவால்லடா! நீ நடிச்சாத்தாண்டா தாங்கவும் முடியல, தூங்கவும் முடியல..!

8. ஒருத்தன்: ‘2012’ படம் வந்திருக்கே, பார்த்துட்டியா?
மற்றவன்: ஓ! ‘வேட்டைக்காரன்’ ரிலீசானா உலகம் என்ன ஆகும்கிறதை அப்பட்டமா காட்டியிருக்காங்க!

ஓடு ஓடு ஓடு .. வரான் பாரு வேட்டைக்காரன்..!!!

விஜய் அல்லது அஜித் படம் வந்தால் யார் சந்தோஷப்படுகிறார்களோ இல்லையோ, மொபைல் நெட்வொர்க்குகளுக்கு கொண்டாட்டம்தான். ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி திட்டி இவர்களின் ரசிகர்கள் அனுப்பும் குறுந்தகவல்கள், ஜோக்குகள் எல்லாமே அட்டகாசம். மிஸ்டர் X, மிஸ்டர் Y என்று ஆனந்த விகடனில் தனியாக ஒரு பக்கமே போடுமளவுக்கு இந்த ஜோக்குகள் பிரசித்தம். அந்த வரிசையில் சமீபத்திய ஹிட் - வேட்டைக்காரன். இங்கே நான் தொகுத்து இருக்கும் ஜோக்குகள் எதுவும் என் சொந்தக் கற்பனை அல்ல. நண்பர்கள் இதை நகைச்சுவையாக மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். (இதெல்லாம் நான் எதுக்கு சொல்றேன்னா, நான் ஒரு நடுநிலைவாதி பாருங்க.. அதுக்காக.. ஹி ஹி ஹி..)

***************

வேட்டைக்காரன் படத்தின் கதைதான் என்ன?

விஜய் ஒரு வேட்டைக்காரர். மான் வேட்டைக்காக காட்டுக்குப் போகிறார். அங்கே புலியின் குகையில் மாட்டிக் கொண்டிருக்கும் அனுஷ்காவைப் பார்க்கிறார். காப்பாற்ற முயலுகையில் புலி அவரைத் துரத்த ஆரம்பிக்கிறது. விஜய் தப்பிப்பதற்காக டிவிஎஸ் சாம்பில் ஏறிப் பறக்கிறார். (இங்கே தான் புலி உறுமுது பாட்டு..) புலியிடம் இருந்து தப்பிக்க வேண்டும். லெப்ட் இன்டிகேடரைப் போட்டு வண்டியை வலது பக்கம் திருப்புகிறார். புலி குழம்பிப் போய் வேறு வழியில் போய் விடுகிறது. வண்டியில் போகும்போது ஒரு தென்னை மரத்திலிருந்து தேங்காய் விஜய் தலையில் விழுகிறது. (இங்கே என் உச்சி மண்டையில சுர்ருங்குது பாட்டு..) திடீர் என்று புலி ஷார்ட் ரூட்டில் வந்து விஜயை மடக்கி விடுகிறது. வேறு வழியின்றி விஜய் பாட ஆரம்பிக்கிறார்.(நான் அடிச்சா தாங்க மாட்ட..) கேட்கும் புலி செத்துவிழுகிறது. அனுஷ்காவைக் காப்பற்றுகிறார் விஜய். கடைசியாக இரண்டு பேரும் சேர்ந்து "கரிகாலன் காலைப் போல' என்று பாட படம் முடிகிறது. எப்பூடி?

சரி சரி.. இந்தக் கதை பிடிக்கவில்லையா? இது ஓகேவா என்று பாருங்கள்..

ஒரு நாள் காக்காவும் கொக்கும் வானத்தில் பறந்து கொண்டிருந்தன. திடீரென்று கொக்கு தடுமாறி சாக்கடையில் விழுந்து விடுகிறது. காக்க தன கையைக் கொடுத்து கொக்கைத் தூக்கி விட, கொக்கு "கறுப்பான கையாலே என்னப் புடிச்சான்" என்று பாட, ஒரே லவ்ஸ்தான்.ஆனால் கொக்கு வெள்ளையாக இருப்பதைக் காரணம் காட்டி காக்காவின் குடும்பத்தார் அவர்களின் காதலி ஏற்க மறுக்கிறார்கள். வேதனை கொண்ட கொக்கு கருப்பாவதர்காக எப்போதும் வெயிலில் ஒற்றைக்காலில் நிற்க ஆரம்பித்தது. எதிர்பாராத ஒரு பொழுதில் 'வேட்டைக்காரன்" விஜய் கொக்கை சுட்டு விடுகிறார். தீராத சினம் கொண்ட காக்கா விஜயை பழி வாங்க சபதம் செய்கிறது. கடைசியில் காக்காவின் சத்தியம் பலித்ததா? படத்தைப் பாருங்கள். (நன்றி - அத்திரி)

இதுவும் பிடிக்கலையா? உண்மையான கதையை சொல்லனுமா?

சாரி.. ஒரு கதைய சொல்லி நண்பர்களோட உயிரை வாங்குற அளவுக்கு நான் கொலைகாரன் இல்லைங்க..

***************

அவசர அறிவிப்பு:

மக்கள் அனைவரும் உடனடியாக "2012 ருத்ரம்" என்னும் படத்தை பார்க்கும்படி கேட்டுக் கொல்லப்படுகிறார்கள். ஏன் என்றால்..
....
....
....
....
வேட்டைக்காரன் படம் ரிலீஸ் ஆனால் என்ன நடக்கும் என்பதை வெள்ளைக்காரங்க படமாஎடுத்திருக்காங்க..

***************

"வேட்டைக்காரன் படம் பார்க்க போற எல்லோருக்கும் ரெண்டு பஞ்சு தராங்கலாமே? காதுல வைக்கிரதுக்கா? பின்னணி இசை அவ்வளவு கொடூரமாவா இருக்கு?"

"அதுக்கு இல்லன்னே.. அந்தப் பஞ்சு ரெண்டும் படம் பார்த்து முடிக்கிறப்ப ஆளத் தூக்கி விடுவாங்கல்ல.. அப்ப மூக்குல வைக்கிறதுக்கு.."(நன்றி -நையாண்டி நைனா )

***************

வேட்டைக்காரன் பாட்டின் லேட்டஸ்ட் ரீமிக்ஸ்:


போஸ்டர் பார்த்தா தாங்க மாட்ட..
டிரைலர் பார்த்தா தூங்க மாட்ட..
படம் பார்த்தா முழுசா வீடு போய் சேர மாட்ட..

***************

ஹட்ச் - இப்போ.. வோடபோன்

மெட்ராஸ் - இப்போ.. சென்னை

பாம்பே - இப்போ.. மும்பை

கல்கத்தா - இப்போ கொல்கத்தா

சர்தார் - இப்போ.. விஜய்..

இப்போதைக்கு அவ்வளவுதான்.. கூடிய விரைவில் "சாட்டைக்காரன் - முன் பின் எந்த நவீனத்துவமும் இல்லாத ஒரு விமர்சனத்தில்" மீட் பண்ணுவோம்..:-)))

திங்கள், 30 நவம்பர், 2009

காதலாகிப் பேசுகிறேன்..





நீ
கவலைப்படுகிறாய்!
இப்போது பார்
கவலைகளுக்கும்
கவலை
பிடித்துவிட்டது...


சேமித்து
வைத்த
என் சின்ன
சின்ன
கவிதைகள் கூட
என்னைப்
பார்த்துச்
சிரிக்கின்றன...
உனக்குப்
பிடிக்காதவை
எல்லாம்
எப்படிக்
காவிதையாகும்
என்று...


உனக்கு
பிடிக்கும்
என்பதால்
எனக்குப்
பிடித்தது
ஏராளம்..
உனக்குப்
பிடிக்காது
என்பதால்
எனக்குப்
பிடிக்காததும்
ஏராளாம்
என்னையும்
சேர்த்து..


ஒற்றை
உரசலில்தான்
பற்றிக் கொள்கிறது
காதலும்
தீக்குச்சியும்
எல்லோரையும்
இறுதியில்
சாம்பலாக்கிவிட ...

ஞாயிறு, 29 நவம்பர், 2009

மனிதநேயம்

நவம்பர் 26 ஒரு வருடம் ஆகிவிட்டது ,மும்பையிலே குண்டு வெடிப்பு,அதற்காய் விளக்கு ஏற்றுகிறாள் நம் தமிழ் பெண் மரினா கடற்கரையில்.
ஊடங்கள் இந்தியாவே கண்ணீர் அஞ்சலி செலுத்துவது போல் பிம்பம்கள் ஏற்படுத்தினர். இதே தமிழ் பத்திரிகைகள் ஊடகங்கள் ஒரு இனப் படுகொலை பக்கத்தில் நடந்திருக்கிறது அதைப் பற்றி ஏன் பேச வில்லை. ஏன் சாகிறவன் தாஜ் ஹோட்டலில் தங்குகின்றவனாக இருக்க வேண்டுமா .
















மும்பையில் தாக்குதல் நடந்த போது சச்சின் வருத்தம் தெரிவித்தார். இதே சச்சின் இலங்கையில் குழந்தைகளை பக்கத்தில் கொன்று குவித்த போது பக்கத்தில் சதம் அடித்து சவம் போல் நடந்து கொண்டது ஏன்.சண்டை உச்சத்தில் நடந்து கொண்டிருந்த போது விளையாட்டு தேவையா?? அப்பொழுது இந்திய அணி வெற்றி பெற்றதை தமிழன் ஏன் கொண்டாடிக்கொண்டிருந்தான் இதே தமிழன் மும்பை குண்டு வெடிப்பிற்கு கண் கலங்குகிறான். நாமெல்லாம் வணிகக் குப்பைகளாகி விட்டோமா. மனித நேயத்திற்கு கூட விளம்பரம் தேவைப்படுகிறதா??????
















என் நண்பர்கள் அங்கே சண்டை உச்சத்தில் நடந்துகொண்டிருந்த போது அங்கே இந்திய அணி விளையாட சென்றதேன்? என் நண்பர்கள் அந்த சமயத்தில் தொலைகாட்சியை பார்த்துக்கொண்டிருந்தனர் ...
நான் அவர்களை திட்டினேன்???பதிலுக்கு "நாம் பார்கவில்லை என்றால் அங்கே சண்டை நின்று விடுமா ??"
என்று வாதாடினான் என் நண்பன். நான் சொன்னேன் "வீட்டில் யாரோ இறக்கிறார்கள் ,அவர்களை நம்மால் உயிருடன் கொண்டு வர முடியாது,அதற்காக நாம் நீலப் படம் பார்த்துக்கொண்டிருபோமா?" என்றேன்
அவன் பேசவில்லை ஆனால் தொலைக்காட்சி மட்டும் பார்த்துக்கொண்டே இருந்தான். இது என்ன மனித நேயம்...

நாம் விளம்பரங்களுக்கு விலை பொய் விட்டோமா.ஊடகங்கள் ஒன்றை நன்றாய் காட்டினால் நாம் வருந்துகிறோம்.மும்பை குண்டு வெடிப்பை ஆங்கில தொலைக்கட்சிகள் நேரடியாய் ஒளிபரப்பின.ஆம் உடனே உப்பு சப்பில்லாத wednesday உன்னை போல் ஒருவன் போன்ற படங்கள் வந்தன. கமலஹாசன் தான் யாருமே சொல்லாத கருத்தை சொல்வதாக தொலைக்காட்சியிலே கதைத்துக்கொண்டிருந்தார் . அடி மட்ட தீவிரவாதியை கொள்வதால் பிரச்சனை தீர்ந்ததா.....ஏன் மகேஷ் பட் மகன் மாட்டி உள்ளாரே அவரை
encounter செய்ய முடியுமா. sanjai dutt இன்னும் நட்சத்திர அந்தஸ்து உள்ளதே கமஹாசன் சட்டையை பிடித்து கேட்பாரா???????










முதலாளித்துவ கருத்து ,,,,,,தீவிரவாதியாய் இருந்தாலும் அடியில் இருப்பவன் மட்டுமே கொலை செய்யப்படுவான்.
ஈராக் செய்தால் அது தீவிரவாதம்,அமெரிக்கா செய்தால் அது தீவிரவாததிற்கு எதிரான புனிதப் போர் .கலைஞர் முதலாளியாய் கொடி பிடித்து, மௌனமாய் மட்டும் அழுவார்.
கமல் முதலாளிகள் இறந்தால் மட்டும் "வன்முறைக்கு வன்முறை தீர்வு " என்று குரல் கொடுப்பார்...................ஏன் இந்திய இளைய சமுதாயத்தின் விடி வெள்ளி அப்துல் கலாம் குரல் கொடுக்க வில்லை இலங்கை பிரச்சனைக்கு....அவர் ராமேஸ்வரம் வேறு அவருக்கு தெரியாதா ??????

ஏன் மும்பையில் அமெரிக்காவில் செத்தால் தான் உயிர்களா ...............மத்ததெல்லாம் ...........?????
ஏன் வணிக குப்பையாகி விட்டோம் ..............மனித நேயத்திற்கு விளம்பரம் செய்தால் தான் குரல் கொடுப்போமா ....இல்லை முதலாளிக்கு மட்டும் குரல் கொடுக்கும் அடிமை உளவியல் நம்மில் இருக்கிறதா????
ஏன் லட்சக் கணக்கான குழந்தைகள் சாகும் போது நாம் மானட மயிலாட பார்த்துக்கொண்டிருந்தோம் ..........
மட்டை பந்து வீச்சு பார்த்துக்கொண்டிருந்தோம்,டோனி லக்ஷ்மிராய் படுக்கை அறைக்கு விளக்கு பிடித்தோம் .....

மும்பையை நியாபகம் வைத்து விளக்கு வைக்கும் தமிழ் பெண்களே,தமிழனுக்காக
உயிர் கொடுத்த ,ஈழ பெண் மானம் காக்க உயிர் விட்ட பிரபாகரன் திலீபன் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள்.செப்டம்பர் 11 என்றால் மட்டும் எப்படி மனித நேயம் பொத்துக்கொண்டு வருகிறது .எங்கு மனிதக்கொலை நடந்தாலும் என் மனம் வலிக்கிறது ....என் மனம் அமெரிக்கனுக்கு மட்டும் அழுகும் பக்குவத்திற்கு வர வில்லை ....!

புதன், 25 நவம்பர், 2009

 யட்சி.
வினோத ஒலி எழுப்பும்
இம்மெளனத்தின் நீட்சி
முடிவில்லா துயரத்தை தருகிறது.
காற்றின் ஓசை மரணித்த
பின்பொழுதுகள்
சிறுமணலாய் உதிர்க்கின்றன
என் இருத்தலை.
நினைத்தவுடன் உருமாறி
பறவையாகும்
மனதின் சிறகடிப்புச்சத்தத்தில்
உயிர்த்தெழுகிறாள் எனக்குள்
வசிக்கும் யட்சி.
நீங்குதல்....
ஒரு புன்னகையை
கொல்வது போல்
ஒரு தவிர்த்தலை
எதிர்கொள்வது போல்
ஒரு உறவை
முறிப்பதுபோல்
கொடூரமானதும்
துயரமானதும்
வேதனையானதும்
தான்
இந்த வலியை
வார்த்தைப்படுத்துவதும்.

சனி, 21 நவம்பர், 2009

ஐன்ஸ்டீன் மனித ரோபோ

ஐன்ஸ்டீன் போல் உருவாக்கியுள்ள மனித ரோபோ வீடியோ பார்த்து மகிழுங்கள்

ஞாயிறு, 15 நவம்பர், 2009

நம்ப பிளாக் & கெட்ஜெடுல youtube வீடியோ வர வைக்க எளிய வழி.




இது நெரியோ பேரு சொல்லி இருப்பங்கோ !! இருந்தாலும் நானும் ஒரு
தபா கூவிக்கிறேன் பா !!



அதே மேரி நமபுளுக்கு புட்சா மேரி கீர, வீடியோவ , நம்ப சைடுல கீர
கெட்ஜெட்ல கூட போட்டுக்கலாம் , சோக்கா இருக்கும் ,



இப்போ அது எப்பிடின்னு பாக்கலாம் , மொத்தல்ல youtube ஓபன் பண்ணி
அதுல உங்களுக்கு புட்சா மேரி கீர ஒரு வீடியோவ ஓபன் பண்ணிக்கோங்க !!



அதும் பக்கத்துல ஒரு சின்ன பொட்டில நாம்ப செலக்ட் பண்ண வீடியோ
பத்தி இருக்கும் அதுக்கு கீய Embed அப்பிடின்னு ஒன்னு இருக்கும் அத்த
அப்பிடியே காப்பி பண்ணி ,



நம்ப பிளாக்குல போடறத்துக்கு newpost இன்னு கீர்த , போய் அதுல
Edit HTML கிளிக் பண்ணி அதுல paste பண்ணிடனும் ,



அப்பால compose இன்னு கீர்த அமுக்கி பாத்தா நம்ப போட்ட வீடியோ
அங்க வந்து இருக்கும் அப்பால ,எதுனா நீங்க எழ்தரா மேரி இருந்தா
எழ்தி வெளியிடலாம் ,



அதே மேரி தான் இந்த வீடியோவ , நம்ப கெட்ஜெட்டுல போடறதுக்கும் ,
இப்போ layout ( தளவமைப்பு) போய் அதுல HTMl /javascript இன்னு கீர்த
ஓபன் பண்ணி இந்த Embed கோடிங்க paste பண்ணிடுங்க ,



அதுல கீர அளவ நம்ப கேட்ஜெட் அளவுக்கு ஏத்த மேரி மாத்திக்கலாம் ,


வெள்ளி, 13 நவம்பர், 2009

மாயன் காலண்டர்.. தற்போது பலர் மனதில் பீதியை கிளப்பிக்கொண்டிருக்கிறது.

ஆதி மனித சமூகமாகிய மாயன் சமூகத்தின் சுழற்சி நிகழ்வுகளின் நாட்காட்டி. உலகின் மூலைகள் எங்கும் மக்களிடம் ஆவலையும் விளிப்பையும் ஏற்படுத்தியிருக்கின்றது .

இறுதியாக 5,125 ஆண்டுகளுக்கு முன் புதுப்பிக்கப்பட்டிருக்கின்றது மாயன் நாட்காட்டி குறிப்பிடும் இம்மனித சமூகம்.. அடுத்தது 2012 டிசம்பர் 21 மாயன் குறிப்பிடும் இந்நாள் பேரழிவுகளுடன் புவி முடிவுக்கு வருகின்றது.ஆதி எகிப்பதிய மக்களால் கூட 2012 ஓர் பாரிய மாற்றத்திற்கான ஆண்டாக எதிர்பார்க்கப்பட்டிருக்கின்றது.

புவியின் துருவப்படுதிகள் இடமாறுவதனால் புவியில் உலகளாவிய பாரிய இயற்கை பேரிடர்கள் ஏற்பட்டும் வெளிக்கிழம்பும் எரிமலை புகை மற்றும் புழுதிகளால் ஏறக்குறை 40 வருடங்களுக்கு சூரியனை பார்ப்பதே இயலாது போகும் என்கின்றனர் மாயன் நாட்காட்டியை நம்புகின்றவர்கள்..

இவற்றை எல்லாம் மறுக்கும் இன்னொரு பகுதயினர் புவியின் முடிவு என்பது சாத்தியமற்ற ஓர் விடையம் சிலவேளைகளில் புதிய யுகம் ஒன்று தோன்றக்கூடும் என்கின்றனர். ஏரிமலை வெடிப்புக்கள், நிலநடுக்கங்கள், சுனாமி, சூறாவளி என ஏற்படும் அனர்த்தங்களினால் மனித சமூகத்தின் பேரழிவு ஒன்று ஏற்படும் என கூறுகின்றது மாயன் நாட்காட்டி.

இந்த உலக உருண்டை சுழல்வது குறைந்து,நின்று பிறகு எதிர் திசையில் சுழலுமாம்.பூமியின் வட துருவம் தெற்காகி ,தென் துருவம் வடக்காகும்,இதனால் பூமியில் பேரழிவு ஏற்படும். இந்த பேரழிவு ஒட்டு மொத்த உலகத்தையும் ஆட்கொண்டு விடும்.பிறகு மறுபடியும் முதலிருந்து உயிர்களின் சுழற்சி தொடங்கும்.

தொன்மையான இனமான மாயன்கள் கூறும் இந்த கருத்தை பற்றிய பயம் பல்வேறு தரப்பினரும் கொண்டது.ஆனால் இந்த இன மக்கள் நாளடைவில் நாகரிக சமுதாயத்தில் ஐக்கியமாகி விட்டார்கள்.உலக பேரழிவு என்பதை விவிலியமும்,கொரானும் 2012 வில் நடக்க கூடியது என கூறியுள்ளதாகவும் பல தரப்பினரும் கூறுகிறார்கள்.

இந்த விஷயத்தை பற்றிய விவாதம் வலையில் மட்டுமன்றி ,டீ கடை அரட்டைகளில் கூட காரசாரமாய் நடந்து கொண்டிருக்கிறது.எதிலும் ஒரு இலாபம் பார்த்து விட நினைக்கும் வெள்ளைக்காரன் இதிலும் ஒரு அருமையான வியாபாரம் செய்திருக்கிறான்.

இதை வியாபரமென்றாலும்,பல தரப்பையும் எளிதில் சென்றடையும் மீடியாவான சினிமாவில் சொல்லியிருப்பது....பலரையும் ரூம் போட்டு யோசிக்க வைத்திருக்கிறது. ஹாலிவுட்டின் பிரபல இயக்குனர் ரோலந்த் எம்ரிச், மாயன்கள் கூறும் கருத்தை கொண்டு ,உலகம் அழிந்தால் எப்படியெல்லாம் அழியும் என காட்சிப்படுத்தியிருக்கிறார்.

இந்தியாவின் நாகாவில் உள்ள ஒரு சுரங்கத்தில் பூமியின் திடீர் அபரிமித வெப்பத்தை நண்பர் ஒருவர் உறுதி செய்ய , வழக்கம் போல் அமெரிக்கர் ஒருவரால் அந்நாட்டு அதிபருக்கு சொல்லப்படுகிறது. தொடர்ந்து வரும் பேரழிவுக்காட்சிகள்,யாரையும் பதறவைத்துவிடும்.

பூமிப்பிழவு,எரிமளைவெடிப்பு,கடலே இடமாறும் அற்புத சுனாமி என படு த்ரில்லிங்காக போகிறது.வழக்கம்போல பணக்காரர்கள் மட்டும் பணம் கொடுத்து பேரழிவிலிருந்து தப்பிக்க முயல்வதும், இல்லாதப்பட்டோருக்காக ஒருவர் குரல் கொடுப்பதும் நமது வாழ்வில் காணும் யதார்த்தங்கள்.எரிமலை வெடிக்கும் பேரழிவை ,செத்து விடுவோம் என்று தெரிந்தும் ,கண்டு ரேடியோவில் வர்ணனை செய்யும் கதாபாத்திரம் சிலிர்க்கச்செய்கிறார்.

பேரழிவிலிருந்து தப்பிக்க நடுத்தர வசதியுடைய எழுத்தாளர் படும் கஷ்டங்களை அதிகம் சொல்லியிருந்தாலும்,பேரழிவில் சிக்கி சின்னாபின்னமாகும் சாமானியர்களை பற்றி சொல்ல மறந்துதான் போய்விட்டாரோ.

இப்படியொரு பேரழிவு நடந்தால் ... நடக்கிறதோ இல்லையோ ரோலன் எம்ரிச் காட்டில் பணமழை நிச்சயம்.பல லாஜிக் மீறல்கள் இருந்தாலும் மறந்து விட்டு ஒரு முறை பார்க்கலாம்.

படம்பார்த்து விட்டு வெளியே வரும்போது ஒருவர் இன்னொருவரிடம் கேட்டுக்கொண்டிருந்தார் "ஆமா உலகம் அழியுமா?அழியாதா?

யாருக்குத்தெரியும்,இப்போது.?2012 ல் தெரிந்து விடும் மாயன் காலண்டர் உருவாக்கியது மாயையா? இல்லை மாயன்கள் தெறமையான பயபுள்ளைக தானா என்று. விமர்சனம்

செவ்வாய், 10 நவம்பர், 2009

ருத்ராட்சம்

ருத்ராட்சம் என்றதும் அனை வருக்கும், சிவனும், சிவனடியார்களும் தான் நினைவுக்கு வருவர். ருத்ராட்சக் கொட்டையும், விபூதிப் பட்டையும் சிவனடியார்களின் சின்னங்கள்; ஆனால், அதன் அருமை, பெருமை களை அறிந்தவர்கள் சிலரே! நம்ம தலைவர் போல

சிவனுறையும் கைலாசம் எனும் இமய மலைப் பகுதிகளில் மட்டுமே இது விளைகிறது. காட்டுப் பயிரான இது, தோட்டமிட்டு வளர்க்கப்படுவதில்லை. ஆதிகாலத்தில் முனிவர்கள் மட்டுமே இதை அறிந்து, பயன்படுத்தி வந்தனர். மூலிகை வகையைச் சேர்ந்த ருத்ராட்சம் மனிதர்களுக்கு மன அமைதியை வழங்குகிறது. மூச்சுக் கோளாறு, மூட்டு வலி, தூக்கமின்மை, மன உளைச்சல் ஆகியவற்றிலிருந்து குணமளிக்கிறது.


மோக இச்சை, துறவறம் மேற்கொண்டவர்களுக்கு உணர்ச்சி ஏற்படாமலிருக்கவே ருத்ராட்ச மாலைகளை அணிந்தனர். ஆண்மை உணர்வை ருத்ராட்சம் குறைத்து விடும். இதனால், இதைக் குடும்ப வாழ்வில் ஈடுபட்டிருப்போர் அணியலாகாது; சிறு குழந்தைகளும், முனிவர்களும் அணியலாம்.


ருத்ராட்சக் கொட்டைகளை இரவில் செப்புப் பாத்திரத்தில் தண்ணீரில் ஊற வைத்து, காலையில் வயிற்று கோளாறு உள்ளவர்கள் அந்த நீரை அருந்த, அனைத்துக் குறைபாடுகளும் நீங்கும்.


ருத்ராட்சத்தை 24 நாட்கள் நல்லெண்ணையில் ஊற வைத்து பிறகு அதை மூட்டுப் பகுதிகளில் தேய்க்க, மூட்டு வலி பூரண குணமாகும்.


ஏட்டுச் சுவடிகளில், ருத்ராட் சம் முதுமையைத் தவிர்த்து இளமையைத் தரும் இனிய மருந்துப் பொருள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. உயர் ரத்த அழுத்தம் மற்றும் இருதயக் கோளாறுகளை ருத்ராட்சம் குணப்படுத்துகிறது.


பித்தம், கபம், வாத குணங்களைக் கட்டுப்படுத்தவும், பெண் களின் மாதவிடாய் பிரச்னைகளை குணப்படுத்தவும் ருத்ராட் சத்திலிருந்து ஆயுர்வேத மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.


சீனாவின் அக்குபஞ்சர் முறையும், மனித நரம்புகளைத் தூண்டி ருத்ராட்சம் புத்துணர்ச்சி அளிப்பதும் ஒரே வகையைச் சார்ந்தது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.


ருத்ராட்சத்தில் 38 வகைகள் உள்ளன. "ஒரு முக ருத்ராட்சம்' என்பது உயர்வகையைச் சேர்ந்தது. வட மாநிலத்தவர் குடும்பங்களில் தங்கள் மூதாதையர் பயன்படுத்திய ருத்ராட்ச மாலை களை பூஜையில் வைத்து காலம், காலமாகப் போற்றி வருகின்றனர்.


ஒருமுக, மூன்று முக, நான்கு முக, ஆறுமுக, ஏழுமுக ருத்ராட்சம் என்று பல வகைகள் உள்ளன.


நவமுக ருத்ராட்சம் எதிரிகளை வீழ்த்தி, வெற்றியைத் தரும் என்று சொல்லப்படுகிறது. வழக்குகளில் வெற்றி பெற இந்த வகை ருத்ராட்சத்தை அணிந்து கொள்வர் சிலர்.


பல வண்ணங்களில் ருத்ராட்சங்கள் கிடைக்கின்றன... சிவப்பு, இளஞ்சிவப்பு, மஞ்சள் ஆகிய வண்ணங்களில் காணப்படும் இவற்றை அமாவாசை, பவுர்ணமி, சூரிய, சந்திர உதயம் இவற்றை ஆதாரமாகக் கொண்டு அவற்றுக்கு ஏற்றபடி அணிகின்றனர் துறவிகள்.


பூமிக்கும், மோட்ச உலகிற்கும் இடையிலான தொடர்பு சாதனமாக சாமியார்கள் ருத் ராட்சத்தை நம்புகின்றனர்.


ருத்ராட்சங்களில் தரக்குறைவானவைகளும் உண்டு. இவற்றை அணிவதால் முழுமையான பலன் கிடைப்பதில்லை. தரமற்ற ருத்ராட்சங்களை எப்படிக் கண்டறிவது? இதை தண்ணீரில் போட்டால் மிதிக்கும்; தரமானவை - நீரில் அமிழ்ந்து விடும். தரமற்றவை எளிதில் விரிசல் விட்டு விடும்; உயர்ந்த வகை விரிசல் விடாது.


இந்தியாவிலிருந்து ருத்ராட்ச மாலைகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி ஆகிறது.