பக்கங்கள்

வெள்ளி, 4 டிசம்பர், 2009

பதிவு பிரபலம் ஆக..

அன்பு நண்பர்களே அருமை தோழிக ளே உங்கள் பதிவு பிரபலம் ஆக அருமையான வழி மக்களின் மனக்குமுறல்களை வெளிகொணர்தல்
எப்படி.....
ஒன்னும் பெருச இல்லங்க விஜய் அவுரு படத்தை பத்தி உங்கள் மேலான
கருத்தை பதிவா பொடுங்க

அப்பறம் கூகுலே திணரும்ல வாங்க வந்து போடுங்க பதிவ... ஒகேயா
வடிவேல், கவுண்டமணி,செந்தில் எல்லாரும் செய்ய முடியாதத நம
செய்வோம்..
நாலுபேர சிரிக்கவச்சா எதுவும் தப்பு இல்லா என்னா சொல்லுறிங்க

வியாழன், 3 டிசம்பர், 2009

விஜய் பத்தி எனக்கு வந்த எஸ்.எம்.எஸ். ஜோக்ஸ்ல லேட்டஸ்ட்

சமிபத்தில் நண்பரின் வலை பதிவில் கண்டது நமக்கு இது மாதிரி விஜய கிண்டல் பண்ணி பதிவு போடுறதுனா ரொம்ப பிடிக்கும்பா ஹைய....


விஜய் பத்தி எனக்கு வந்த எஸ்.எம்.எஸ். ஜோக்ஸ்ல லேட்டஸ்ட்:

பராக் ஒபாமா பின்லேடனைப் பிடிச்சே ஆகணும்னு தன் ராணுவத்தை முடுக்கி விட்டாரு. ஒசாமா பயந்து, எங்கே ஒளிஞ்சுக்கலாம்னு தன் உதவியாளர் கிட்டே ஆலோசனை கேட்டாரு. “வேட்டைக்காரன் ரிலீசாகப் போகுது. அந்தத் தியேட்டர்ல போய் ஒளிஞ்சுக்குங்க. ஒரு பய வரமாட்டான் அங்கே”ன்னாராம் உதவியாளர். ஒசாமா உடனே, “அடப்போய்யா! தப்பிக்கிறதுக்கு வழி கேட்டா, சாகுறதுக்கு வழி சொல்றியே!”ன்னு கடுப்பாயிட்டாராம்.

என்னைக் கடுப்பேற்படுத்தின இன்னும் சில விஜய் ஜோக்ஸ்:

1. ஒரு குரங்கு, ஒரு குருவியை மீட் பண்ணிச்சாம். “உன்ன விட நான் ஃபேமஸ்”னுச்சாம். அதுக்கு குருவி, “இல்ல. நான்தான் ஃபேமஸ். ஏன்னா, என் பேர்ல ஒரு படமே வந்திருக்கு”ன்னுச்சாம். உடனே குரங்கு, “அடப் போவியா! அந்தப் படத்துல ஹீரோவே நான்தான்!”னுச்சாம்.

2. குருவி செத்துப் போச்சு; வில்லு ஒடைஞ்சு போச்சு. வேட்டைக்காரன் வந்து மட்டும் என்னத்த வெட்டி முறிக்கப் போறான்?

3. ஒரு மரத்துல பன்னிரண்டு குருவிங்க உக்கார்ந்திருந்துச்சு. ஒருத்தன் வந்து துப்பாக்கியால அதுங்களைச் சுட்டான். எல்லாக் குருவியும் பறந்தோடிடுச்சு. ஒரே ஒரு குருவி மட்டும் ஓடாம உக்கார்ந்திருந்துச்சு. ஏன் தெரியுமா? அது விஜய்யோட ‘குருவி’!

4. நடிகர்களுக்கெல்லாம் ஒரு தேர்வு வெச்சாங்க. ‘உங்களோட ஹிட் படங்களைப் பற்றி ஒரு குறிப்பு வரைக’ என்பதுதான் கேள்வி. உடனே விஜய் எழுந்திருச்சு சொன்னாராம்... “இது அவுட் ஆஃப் சிலபஸ்!” இன்னொரு தேர்வு. அதுல கொடுக்கப்பட்ட கேள்வி: ‘உங்களோட ஃப்ளாப் படங்களைப் பற்றி விவரித்து எழுதுக.’ விஜய் மட்டும் அடிஷனல் ஷீட்ஸ் வாங்கித் தள்ளிக்கிட்டே இருந்தாராம்.

5. விஜய் படம் ஓடிட்டிருந்த தியேட்டர்ல எக்கச்சக்கக் கூட்டம். என்னடான்னு ஆச்சர்யப்பட்டுக் கேட்டான் ஒருத்தன். அதுக்கு இன்னொருத்தன் சொன்னான், “அதொண்ணுமில்லடா! இந்தப் படத்துக்கு எவனோ ரிசர்வ் பண்ண வந்திருக்கானாம். அவனைப் பார்க்கத்தான் இத்தனைக் கூட்டம்!”

6. விஜய் படம் ரிலீசாகியிருந்த தியேட்டர்ல ஈயாடிச்சு. சரியான கலெக்‌ஷனே இல்லை. தியேட்டர் ஓனர் ஒரு ஐடியா பண்ணினார். எல்லாரும் ஃப்ரீயா உள்ளே வரலாம்னு சொல்லிட்டார். ஜனங்க முண்டியடிச்சுக்கிட்டு கும்பல் கும்பலா உள்ளே போனாங்க. அதுக்கப்புறம் கதவை மூடிட்டு, “இப்ப யாராவது வெளியே போகணும்னா இத்தனை ரூபாய் கொடுக்கணும்”னு டிக்கெட் கட்டணம் வசூல் பண்ண ஆரம்பிச்சாராம். பிளாக்ல எல்லாம் வித்துப் போயி, எக்கச்சக்க வசூலை அள்ளிக் குமிச்சிருச்சாம்.

7. விஜய்: நா அடிச்சா தாங்கமாட்ட, நாலு மாசம் தூங்கமாட்ட....
ஒரு குரல்: டேய், நீ அடிச்சாக்கூட பரவால்லடா! நீ நடிச்சாத்தாண்டா தாங்கவும் முடியல, தூங்கவும் முடியல..!

8. ஒருத்தன்: ‘2012’ படம் வந்திருக்கே, பார்த்துட்டியா?
மற்றவன்: ஓ! ‘வேட்டைக்காரன்’ ரிலீசானா உலகம் என்ன ஆகும்கிறதை அப்பட்டமா காட்டியிருக்காங்க!

ஓடு ஓடு ஓடு .. வரான் பாரு வேட்டைக்காரன்..!!!

விஜய் அல்லது அஜித் படம் வந்தால் யார் சந்தோஷப்படுகிறார்களோ இல்லையோ, மொபைல் நெட்வொர்க்குகளுக்கு கொண்டாட்டம்தான். ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி திட்டி இவர்களின் ரசிகர்கள் அனுப்பும் குறுந்தகவல்கள், ஜோக்குகள் எல்லாமே அட்டகாசம். மிஸ்டர் X, மிஸ்டர் Y என்று ஆனந்த விகடனில் தனியாக ஒரு பக்கமே போடுமளவுக்கு இந்த ஜோக்குகள் பிரசித்தம். அந்த வரிசையில் சமீபத்திய ஹிட் - வேட்டைக்காரன். இங்கே நான் தொகுத்து இருக்கும் ஜோக்குகள் எதுவும் என் சொந்தக் கற்பனை அல்ல. நண்பர்கள் இதை நகைச்சுவையாக மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். (இதெல்லாம் நான் எதுக்கு சொல்றேன்னா, நான் ஒரு நடுநிலைவாதி பாருங்க.. அதுக்காக.. ஹி ஹி ஹி..)

***************

வேட்டைக்காரன் படத்தின் கதைதான் என்ன?

விஜய் ஒரு வேட்டைக்காரர். மான் வேட்டைக்காக காட்டுக்குப் போகிறார். அங்கே புலியின் குகையில் மாட்டிக் கொண்டிருக்கும் அனுஷ்காவைப் பார்க்கிறார். காப்பாற்ற முயலுகையில் புலி அவரைத் துரத்த ஆரம்பிக்கிறது. விஜய் தப்பிப்பதற்காக டிவிஎஸ் சாம்பில் ஏறிப் பறக்கிறார். (இங்கே தான் புலி உறுமுது பாட்டு..) புலியிடம் இருந்து தப்பிக்க வேண்டும். லெப்ட் இன்டிகேடரைப் போட்டு வண்டியை வலது பக்கம் திருப்புகிறார். புலி குழம்பிப் போய் வேறு வழியில் போய் விடுகிறது. வண்டியில் போகும்போது ஒரு தென்னை மரத்திலிருந்து தேங்காய் விஜய் தலையில் விழுகிறது. (இங்கே என் உச்சி மண்டையில சுர்ருங்குது பாட்டு..) திடீர் என்று புலி ஷார்ட் ரூட்டில் வந்து விஜயை மடக்கி விடுகிறது. வேறு வழியின்றி விஜய் பாட ஆரம்பிக்கிறார்.(நான் அடிச்சா தாங்க மாட்ட..) கேட்கும் புலி செத்துவிழுகிறது. அனுஷ்காவைக் காப்பற்றுகிறார் விஜய். கடைசியாக இரண்டு பேரும் சேர்ந்து "கரிகாலன் காலைப் போல' என்று பாட படம் முடிகிறது. எப்பூடி?

சரி சரி.. இந்தக் கதை பிடிக்கவில்லையா? இது ஓகேவா என்று பாருங்கள்..

ஒரு நாள் காக்காவும் கொக்கும் வானத்தில் பறந்து கொண்டிருந்தன. திடீரென்று கொக்கு தடுமாறி சாக்கடையில் விழுந்து விடுகிறது. காக்க தன கையைக் கொடுத்து கொக்கைத் தூக்கி விட, கொக்கு "கறுப்பான கையாலே என்னப் புடிச்சான்" என்று பாட, ஒரே லவ்ஸ்தான்.ஆனால் கொக்கு வெள்ளையாக இருப்பதைக் காரணம் காட்டி காக்காவின் குடும்பத்தார் அவர்களின் காதலி ஏற்க மறுக்கிறார்கள். வேதனை கொண்ட கொக்கு கருப்பாவதர்காக எப்போதும் வெயிலில் ஒற்றைக்காலில் நிற்க ஆரம்பித்தது. எதிர்பாராத ஒரு பொழுதில் 'வேட்டைக்காரன்" விஜய் கொக்கை சுட்டு விடுகிறார். தீராத சினம் கொண்ட காக்கா விஜயை பழி வாங்க சபதம் செய்கிறது. கடைசியில் காக்காவின் சத்தியம் பலித்ததா? படத்தைப் பாருங்கள். (நன்றி - அத்திரி)

இதுவும் பிடிக்கலையா? உண்மையான கதையை சொல்லனுமா?

சாரி.. ஒரு கதைய சொல்லி நண்பர்களோட உயிரை வாங்குற அளவுக்கு நான் கொலைகாரன் இல்லைங்க..

***************

அவசர அறிவிப்பு:

மக்கள் அனைவரும் உடனடியாக "2012 ருத்ரம்" என்னும் படத்தை பார்க்கும்படி கேட்டுக் கொல்லப்படுகிறார்கள். ஏன் என்றால்..
....
....
....
....
வேட்டைக்காரன் படம் ரிலீஸ் ஆனால் என்ன நடக்கும் என்பதை வெள்ளைக்காரங்க படமாஎடுத்திருக்காங்க..

***************

"வேட்டைக்காரன் படம் பார்க்க போற எல்லோருக்கும் ரெண்டு பஞ்சு தராங்கலாமே? காதுல வைக்கிரதுக்கா? பின்னணி இசை அவ்வளவு கொடூரமாவா இருக்கு?"

"அதுக்கு இல்லன்னே.. அந்தப் பஞ்சு ரெண்டும் படம் பார்த்து முடிக்கிறப்ப ஆளத் தூக்கி விடுவாங்கல்ல.. அப்ப மூக்குல வைக்கிறதுக்கு.."(நன்றி -நையாண்டி நைனா )

***************

வேட்டைக்காரன் பாட்டின் லேட்டஸ்ட் ரீமிக்ஸ்:


போஸ்டர் பார்த்தா தாங்க மாட்ட..
டிரைலர் பார்த்தா தூங்க மாட்ட..
படம் பார்த்தா முழுசா வீடு போய் சேர மாட்ட..

***************

ஹட்ச் - இப்போ.. வோடபோன்

மெட்ராஸ் - இப்போ.. சென்னை

பாம்பே - இப்போ.. மும்பை

கல்கத்தா - இப்போ கொல்கத்தா

சர்தார் - இப்போ.. விஜய்..

இப்போதைக்கு அவ்வளவுதான்.. கூடிய விரைவில் "சாட்டைக்காரன் - முன் பின் எந்த நவீனத்துவமும் இல்லாத ஒரு விமர்சனத்தில்" மீட் பண்ணுவோம்..:-)))

திங்கள், 30 நவம்பர், 2009

காதலாகிப் பேசுகிறேன்..





நீ
கவலைப்படுகிறாய்!
இப்போது பார்
கவலைகளுக்கும்
கவலை
பிடித்துவிட்டது...


சேமித்து
வைத்த
என் சின்ன
சின்ன
கவிதைகள் கூட
என்னைப்
பார்த்துச்
சிரிக்கின்றன...
உனக்குப்
பிடிக்காதவை
எல்லாம்
எப்படிக்
காவிதையாகும்
என்று...


உனக்கு
பிடிக்கும்
என்பதால்
எனக்குப்
பிடித்தது
ஏராளம்..
உனக்குப்
பிடிக்காது
என்பதால்
எனக்குப்
பிடிக்காததும்
ஏராளாம்
என்னையும்
சேர்த்து..


ஒற்றை
உரசலில்தான்
பற்றிக் கொள்கிறது
காதலும்
தீக்குச்சியும்
எல்லோரையும்
இறுதியில்
சாம்பலாக்கிவிட ...

ஞாயிறு, 29 நவம்பர், 2009

மனிதநேயம்

நவம்பர் 26 ஒரு வருடம் ஆகிவிட்டது ,மும்பையிலே குண்டு வெடிப்பு,அதற்காய் விளக்கு ஏற்றுகிறாள் நம் தமிழ் பெண் மரினா கடற்கரையில்.
ஊடங்கள் இந்தியாவே கண்ணீர் அஞ்சலி செலுத்துவது போல் பிம்பம்கள் ஏற்படுத்தினர். இதே தமிழ் பத்திரிகைகள் ஊடகங்கள் ஒரு இனப் படுகொலை பக்கத்தில் நடந்திருக்கிறது அதைப் பற்றி ஏன் பேச வில்லை. ஏன் சாகிறவன் தாஜ் ஹோட்டலில் தங்குகின்றவனாக இருக்க வேண்டுமா .
















மும்பையில் தாக்குதல் நடந்த போது சச்சின் வருத்தம் தெரிவித்தார். இதே சச்சின் இலங்கையில் குழந்தைகளை பக்கத்தில் கொன்று குவித்த போது பக்கத்தில் சதம் அடித்து சவம் போல் நடந்து கொண்டது ஏன்.சண்டை உச்சத்தில் நடந்து கொண்டிருந்த போது விளையாட்டு தேவையா?? அப்பொழுது இந்திய அணி வெற்றி பெற்றதை தமிழன் ஏன் கொண்டாடிக்கொண்டிருந்தான் இதே தமிழன் மும்பை குண்டு வெடிப்பிற்கு கண் கலங்குகிறான். நாமெல்லாம் வணிகக் குப்பைகளாகி விட்டோமா. மனித நேயத்திற்கு கூட விளம்பரம் தேவைப்படுகிறதா??????
















என் நண்பர்கள் அங்கே சண்டை உச்சத்தில் நடந்துகொண்டிருந்த போது அங்கே இந்திய அணி விளையாட சென்றதேன்? என் நண்பர்கள் அந்த சமயத்தில் தொலைகாட்சியை பார்த்துக்கொண்டிருந்தனர் ...
நான் அவர்களை திட்டினேன்???பதிலுக்கு "நாம் பார்கவில்லை என்றால் அங்கே சண்டை நின்று விடுமா ??"
என்று வாதாடினான் என் நண்பன். நான் சொன்னேன் "வீட்டில் யாரோ இறக்கிறார்கள் ,அவர்களை நம்மால் உயிருடன் கொண்டு வர முடியாது,அதற்காக நாம் நீலப் படம் பார்த்துக்கொண்டிருபோமா?" என்றேன்
அவன் பேசவில்லை ஆனால் தொலைக்காட்சி மட்டும் பார்த்துக்கொண்டே இருந்தான். இது என்ன மனித நேயம்...

நாம் விளம்பரங்களுக்கு விலை பொய் விட்டோமா.ஊடகங்கள் ஒன்றை நன்றாய் காட்டினால் நாம் வருந்துகிறோம்.மும்பை குண்டு வெடிப்பை ஆங்கில தொலைக்கட்சிகள் நேரடியாய் ஒளிபரப்பின.ஆம் உடனே உப்பு சப்பில்லாத wednesday உன்னை போல் ஒருவன் போன்ற படங்கள் வந்தன. கமலஹாசன் தான் யாருமே சொல்லாத கருத்தை சொல்வதாக தொலைக்காட்சியிலே கதைத்துக்கொண்டிருந்தார் . அடி மட்ட தீவிரவாதியை கொள்வதால் பிரச்சனை தீர்ந்ததா.....ஏன் மகேஷ் பட் மகன் மாட்டி உள்ளாரே அவரை
encounter செய்ய முடியுமா. sanjai dutt இன்னும் நட்சத்திர அந்தஸ்து உள்ளதே கமஹாசன் சட்டையை பிடித்து கேட்பாரா???????










முதலாளித்துவ கருத்து ,,,,,,தீவிரவாதியாய் இருந்தாலும் அடியில் இருப்பவன் மட்டுமே கொலை செய்யப்படுவான்.
ஈராக் செய்தால் அது தீவிரவாதம்,அமெரிக்கா செய்தால் அது தீவிரவாததிற்கு எதிரான புனிதப் போர் .கலைஞர் முதலாளியாய் கொடி பிடித்து, மௌனமாய் மட்டும் அழுவார்.
கமல் முதலாளிகள் இறந்தால் மட்டும் "வன்முறைக்கு வன்முறை தீர்வு " என்று குரல் கொடுப்பார்...................ஏன் இந்திய இளைய சமுதாயத்தின் விடி வெள்ளி அப்துல் கலாம் குரல் கொடுக்க வில்லை இலங்கை பிரச்சனைக்கு....அவர் ராமேஸ்வரம் வேறு அவருக்கு தெரியாதா ??????

ஏன் மும்பையில் அமெரிக்காவில் செத்தால் தான் உயிர்களா ...............மத்ததெல்லாம் ...........?????
ஏன் வணிக குப்பையாகி விட்டோம் ..............மனித நேயத்திற்கு விளம்பரம் செய்தால் தான் குரல் கொடுப்போமா ....இல்லை முதலாளிக்கு மட்டும் குரல் கொடுக்கும் அடிமை உளவியல் நம்மில் இருக்கிறதா????
ஏன் லட்சக் கணக்கான குழந்தைகள் சாகும் போது நாம் மானட மயிலாட பார்த்துக்கொண்டிருந்தோம் ..........
மட்டை பந்து வீச்சு பார்த்துக்கொண்டிருந்தோம்,டோனி லக்ஷ்மிராய் படுக்கை அறைக்கு விளக்கு பிடித்தோம் .....

மும்பையை நியாபகம் வைத்து விளக்கு வைக்கும் தமிழ் பெண்களே,தமிழனுக்காக
உயிர் கொடுத்த ,ஈழ பெண் மானம் காக்க உயிர் விட்ட பிரபாகரன் திலீபன் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள்.செப்டம்பர் 11 என்றால் மட்டும் எப்படி மனித நேயம் பொத்துக்கொண்டு வருகிறது .எங்கு மனிதக்கொலை நடந்தாலும் என் மனம் வலிக்கிறது ....என் மனம் அமெரிக்கனுக்கு மட்டும் அழுகும் பக்குவத்திற்கு வர வில்லை ....!