பக்கங்கள்

சனி, 12 டிசம்பர், 2009

மன்னார்குடி பாகம் 2

வாங்க மன்னார்குடி பாகம் 2க்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்

 எங்க ஊரின் அமைவிடம் 10.67° N 79.43° E

ஆகும்.  கடல் மட்டத்தில் இருந்து எங்கள் ஊர் சராசரியாக 6 மீட்டர் (19 அடி) உயரத்தில் இருக்கின்றது.
எங்க ஊரில் மொத்தம் 24 குளம் இருந்ததா பெரியவங்க சொல்வாங்க
ஆனா இப்ப பாதிக்குமேல இல்ல அதமட்டும் உறுதியா சொல்லமுடியும்
ஒரு காலத்துல எங்க ஊர்ல தண்ணிபஞ்சம் தலைவிரிச்சு ஆடுச்சாம்
அப்போதய மன்னர் ஊர் சுத்தி குளம் வெட்ட உத்திரவு பிறப்பித்தாக
தகவல்
ஊர் மக்கா பத்தி சொல்லாம இருப்பேன?

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 61,588 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். மன்னார்குடி மக்களின் சராசரி கல்வியறிவு 79% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 84%, பெண்களின் கல்வியறிவு 74% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. மன்னார்குடி மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.கணக்கெடுப்பு பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 20, 2006.
2009 தகவல் கைவசம் இல்லை
ஊர்ல நமக்கு சங்கம் 2,3 இருக்கு அது ஒரு இடம் டீ
கடை பெயர் நேதாஜி டீகடை
தினமணி செய்திதாள்ல கூட அதபத்தி செய்தி வந்துச்சு


ஓரு டீ போடும் தொழிலாளி ஒரு நாளில் எத்தனை டீ தயாரிக்கமுடியும்? ஒருங்கிணைந்த திருவாருர் மாவட்டம் மன்னார்குடியைச்சேர்ந்த டீ போடும் தொழிலாளி ஒரு நாளில் 5000 டீ போடுவதாக தினமணியில்
செய்தி வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டிலேயே அதிகமாக டீ போடும் அந்த தொழிலாளியின் பெயர் நேதாஜி. ஒரு நாளைக்கு 5000 டீ
போடுவது பெரிய செய்தியில்லை அவருக்கு. அந்த 5000 டீயையும் ஒரே ருசியுடன் தருவதுதான் செய்தி.
அவருடைய டீக்கடை அதிகாலை நான்கு மணிக்கு திறக்கப்படுகிறது. நண்பகலில் சற்று ஓய்வு. பிறகு சதா
சர்வ நேரமும் டீ...டீ...டீ..தான்.
மற்ற கடைகளைவிட இவருடைய கடையில் டீயின் விலை 50 பைசா கூடுதல். கூட்டத்துக்கு குறைவில்லை.
"கறவைப்பால் மட்டும் வாங்குகிறோம். இரண்டு அடுப்பு இருக்கும். ஒன்று தண்ணீர் கலக்காத பால் கொதிக்க.
இன்னொன்றில் ஒன்றுக்கு மூன்று என்கிற கணக்கில் தண்ணீர் கலந்த பால் கொதித்துக்கொண்டிருக்கும். டிக்காக்க்ஷனை தண்ணீரில் போடமாட்டோம். இரண்டாவது பாலில் போடுவோம். டிக்காக்க்ஷன் தயாரானதும் பழுக்கக்காய்ச்சிய முதல் பாலை சேர்த்தால் நேதாஜி பிராண்ட் டீ தயார்" என்கிறார்.
டீத்தூள் அதிகம் வேகக்கூடாதாம். பாலை நன்கு கொதிப்பேற்ற வேண்டுமாம். நல்ல டீ போட விரும்புவோருக்கு நேதாஜி தரும் டெக்னிகல் அட்வைஸ்.
நீங்கள் அவருடன் பேசிக்கொண்டிருந்தால் வரிசையில் கடைசி இடம்தான் உங்களுக்கு. பேசுவதை நிறுத்திவிட்டு வரிசையில் போய் நின்று கொள்ளுங்கள்.
நன்றி:தினமணி

 அப்புறம் இனிப்பு கடை அங்க நமக்கு சங்கம் இல்ல ஆனா டில்லி ஸ்விட் கடை இருக்கு அதபத்தி சொல்லனும்னா
மனிதன் என்றால் ஆள் பாதி ஆடை பாதி என்பதுபோல் முந்திரி அல்வா என்றால், அல்வா பாதி முந்திரி பாதி. ஒரு கடிக்கு முந்திரியும் மறு கடிக்கு அல்வாவும் பல்லில் சிக்கும்; இரண்டும் சேர்ந்து ஒன்றாய் கரைந்து உள்ளே போகும் ருசியே அலாதிதான்!
அந்தக் காலம் தொட்டு மன்னார்குடியில் மட்டும் இந்த ருசி கிடைப்பதற்கு பாமணியாற்றுத் தண்ணீரும் ஒரு காரணம் என்கிறார்கள் உள்ளூர்க்காரர்கள்.
மன்னார்குடி அல்வா வரலாற்றில் ஒரு வினோதம் இருக்கிறது. அல்வாவில் அக்காலத்து ருசி அப்படியே இருந்தாலும் அல்வா விற்பவர்கள் ஒரே ஆட்கள் இல்லை என்பதுதான் அது. காலம் மாறும்போதெல்லாம் இங்கு அல்வா கடைக்காரர்களும் மாறுகிறார்கள்.
ஆனால், அந்த ருசி மட்டும் ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு கடைக்கு வாய்க்கிறது. அதிலும் ஒரு வேடிக்கை – இப்படி பேர் வாங்குகிறவர்கள் வெளியூர்காரர்களாக இருப்பது.
அந்த வகையில் இந்தத் தலைமுறையில் அந்த ருசி “டெல்லி ஸ்வீட்ஸ்’ கடைக்காரர்களுக்குக் கிட்டியிருக்கிறது. ருசியைப் பிடித்தது எப்படி? கடை உரிமையாளர் விழுப்புரம் யுவராஜ் சொல்கிறார்:
“”இரு பங்கு கோதுமை, மூன்று பங்கு ஜீனி, ஒரு பங்கு முந்திரி, அரை பங்கு எண்ணெய், அரை பங்கு நெய், இன்னும் சில இத்யாதிகள். இவை இருந்தால் மன்னார்குடி அல்வாவைச் செய்துவிடலாம். ஆனால், கோதுமைப் பால் எடுப்பதில் தொடங்கி முந்திரியைப் போட்டு கிளறுவது வரை அது அதற்கான பக்குவத்தைக் கையாள வேண்டும். அதில்தான் இருக்கிறது வித்தை.
சரியாக 6 மணி நேரம் கோதுமையை ஊற வைக்க வேண்டும். ஒரு பங்கு கோதுமையில் அரை பங்கு பாலுக்கு மேல் எடுக்கக் கூடாது. அல்வாவில் எண்ணெய் அதிகம் இருந்தால் சுவை கொடுக்காது; முழுக்க முழுக்க நெய்யில் செய்தால் பதம் கொடுக்காது. இந்த இரண்டையும் சரி சமமாய் கலக்க வேண்டும்.
மன்னார்குடி அல்வாவுக்கு நாக்குப் பதம் கிடையாது; கைப்பதம்தான். பாகும் பாலும் சேர்ந்து கூடும்போது அல்வாவை எடுத்து உள்ளங்கையில் போட்டால் உருளைப்போல் உருள வேண்டும். உருண்டால் அது மன்னார்குடி பாணி அல்வா”
இன்னும் நிறைய இருக்கு அடுத்த பாகத்தில் பார்போம் மறக்காம்
ஓட்டு பொடுங்க பின்னுட்டம் இடுங்க
பதிவ படிச்சவங்க அனைவருக்கும் நன்றி..

வேட்டைகாரன் திரைவிமர்ச்சனம்

இன்றுமட்டும் நான் இணையத்தில் படித்த வேட்டைகாரன் பற்றிய தொகுப்பு சிறுபார்வை

கணேஷ் கிறுக்களிள் இருந்து                          


தமிழர் பதிவில் இருந்து

காங்கிரஸுடன் ரகசிய உறவு வைத்துக் கொண்டுள்ள இவன் வேட்டைக்காரனள்ள இவன் ஒரு பிச்சைக்காரன், அரைவேக்காட்டு மடையன்

தமிழ் உறவுகளே! இந்த அரைவேக்காட்டு மடையனின் படங்களை புறக்கணிக்கவும் !!!
--------------------------------------------------------------------------------------------------------------------

வேட்டைக்காரன் படத்துக்கு மீண்டும் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த முறை உள்ளூரில் அல்ல... வசூலுக்கு பெரிதும் நம்பியிருக்கும் வெளிநாடுகளிலிருந்து.

காங்கிரஸுடன் ரகசிய உறவு வைத்துக் கொண்டு, ஒப்புக்காக ஈழத் தமிழர்களுக்கு ஆதரவளிப்பதாக நாடகமாடிய விஜய்யின் வேட்டைக்காரனைப் புறக்கணிப்போம் என ஈழத் தமிழர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

மேலும் இலங்கை ராணுவத்துக்கு வன்னிப் போர் காலத்தில் பாடல்கள் உருவாக்கிய ராஜ் வீரரத்னே என்பவருடன் இணைந்து பணியாற்றும் விஜய் ஆண்டனி, இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

தமிழ் உணர்வுக்கு எதிரான ஒரு சிங்களப் பாடலின் மெட்டையும் அப்படியே வேட்டைக்காரனில் பயன்படுத்தியுள்ளார். எனவே இந்தப் படத்தை அனைத்து தமிழர்களும் புறக்கணிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

படம் வெளியாக இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் கிளம்பியுள்ள இந்த எதிர்ப்பு விஜய் தரப்பை அதிர வைத்துள்ளது.

இந்த எதிர்ப்பு கோஷத்தை தமிழர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகவும், துண்டுப் பிரசுரங்களாகவும் புலம்பெயர்த் தமிழர்கள் அனுப்பி வருகின்றனர்.


மீனகம் இணையத்தில் இருந்து

“வேட்டைக்காரன்” சூடு சுறணையின்றித் தமிழன் பார்த்து ரசிப்பானா? பிய்ந்த செருப்பால் அடிப்பானா?: சுவிஸ் இளையோர் பேரவை

பதிந்தவர்_கனி
boycott_traitor_filmவிஜயின் வேட்டைக்காரன் திரைப்படத்தை புறக்கணிக்க வேண்டி சுவிஸ் தமிழ் இளையோர் பேரவை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அதன் முழு வடிவம் கீழே தரப்பட்டுள்ளது:
தமிழனை வேட்டையாடியவர்களுடன் கொண்டாடி மகிழ்பவர்கள் தயாரிப்பில் வேட்டைக்காரன். சூடு சுறணையின்றித் தமிழன் பார்த்து ரசிப்பானா? பிய்ந்த செருப்பால் அடிப்பானா?
எமது அன்புக்கும் மதிப்புக்குமுரிய சுவிஸ் வாழ்த் தமிழ் மக்களே!
வருகின்ற 19 ஆம் 20 ஆம் திகதிகளில் வேட்டைக்காறன்; எனும் திரைப்படம் சுவிஸ் எங்கும் திரையிடப்படுவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். உங்களுடைய பொழுதுபோக்கை தடுக்கும் நோக்கத்துடன் உங்கள் பாசத்துக்குரிய தேசப்பற்றுள்ள பிள்ளைகளாகிய நாம் இவ் பகீரங்க அறிவிப்பை கோரிநிக்கவில்லை.
மாறாக உங்களது பொழுதுபோக்கு எமது இனஅழிக்கக் காரணமாக இருந்துவருபவர்களுக்கு வருமானம் பெற்றுக்கொடுப்பதையே எம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நினைத்துப்பாருங்கள் மே 18 ஐ. எம் உறவுகளின் இரத்த ஆறு ஓடியபோது, கிழிந்து தொங்கிய உடல் உறுப்புக்களுடன் எவருமே எம்மைக் காப்பாற்ற வரமாட்டாரா என்று கதறியபோது தமிழகத்தின் அமாவாசை கருணாநிதி தனது கதிரை மோகத்தில் எமது உறவுகளைக் கைகழுவி விட்டான். எமது உறவுகளின் பிணங்களின் மேல் சிம்மாசனமிட்டிருந்தான்.
இச் சதிகாறக் குடும்பத்தின் நிறுவனமான “சண்” நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவரும் இத்திரைப்படத்தை மானமுள்ள இத் தமிழ்ச்சாதி பார்க்குமா? எமது தமிழக மீனவர்களைக் எப்பொழுது சிங்கள இனவெறியர்கள் கொல்லத் தொடங்கினார்களோ அப்பொழுதே தொலைந்தது இந்திய இறையாண்மை. அப்படி இல்லாத இறையாண்மைக்காக தமிழரின் இறைச்சித் தசைகளை வேட்டையாடி கசாப்புக்கடை நடத்தியவர்களுக்கு அழிவாயுதம் கொடுத்த காங்கிரஸ் ஆட்சியின் கொள்கை வேட்டைக்காரன் இளையதளபதி என்பவருக்கு பிடித்துக்கொண்டுள்ளதாம்.
இனப்பற்றும், மண்பற்றும் உள்ள எமது தமிழ்ச்சமுதாயமே, ஆற்றலும் அறிவுமிக்க எமது இளையோர்களே இவ் அநியாயத்தைத் தட்டிக்கேழுங்கள். அது ஒருபுறமிருக்கு எம்மினத்தை வேட்டையாடி, எம் தாய்நாட்டை ஆக்கிரமித்து, தமிழ்த்தாயை மானபங்கப்படுத்தி, எமது உறவுகளை சிறைப்பிடித்தவர்களுக்கு களைப்பாற்றிக் கூத்துப்போட இத்திரைப்படத்தின்; இசையமைத்துள்ள விஜை அன்ரனி வெற்றிப்பாடலுக்கு இசையமைத்துக் கொடுத்துள்ளார்.
பாருங்கள் எமது அன்புக்கினிய உறவுகளே. ஒரு சதிகாறக் கும்பலே இத்திரைப்படத்தில் இணைந்துள்ளது. எம்மை வேட்டையாடியதால் தான் வேட்டைக்காறன் என்று பேயர் சூட்டினார்களோ தெரியவில்லை. மொத்தத்தில் வேட்டைக்காரன் தமிழனை வேட்டையாடியவன் என்பதே உங்கள் பிள்ளைகளின் பொருள்.
தமிழ்த் தேசியம் வாழுகிறதென்றால்; மானமுள்ள தமிழ்ச்சாதி வாழ்கிறதென்றால் இனி எவருமே எமது தலையில் மிளைகாயை அரைக்க முடியாது என்பதை வேட்டைக்காரனை வேட்டையாடி நிரூபித்துக்காட்டுங்கள்.
உங்கள் பிள்ளைகளாகிய நாம் மிகப்பெரும் விடுதலைக்கான பணியை சுமக்க ஆரம்பித்துள்ளோம். எம்மினத்தை பாதிக்கும் எவ்விடயமாகவிருந்தாலும் தட்டிக்கேட்கும் பணியை எம்மிடம் நீங்கள் கையளித்துள்ளீர்கள். அதை நாம் சரிவர முன்னெடுக்கவேண்டியது எமது கடமையாகும்.
உங்கள் பிள்ளைகளின் அன்பான வேண்டுகோளை ஏற்றுக்கொள்வீர்கள் என்று சந்தேகத்திக்கிடமின்றி நம்புகிறோம்.
வாழ்க தமிழ்த்தேசியம்.
தமிழ் இளையோர் பேரவை – சுவிஸ்

புதன், 9 டிசம்பர், 2009

மன்னார்குடி பாகம் 1

 இன்று நான் பிறந்து தவழ்ந்து வளர்ந்து சுற்றி திரிந்த மன்னார்குடியை பற்றி உங்களுடன் பகிர்ந்து கொ(ல்)ள்ள போகிறேன்



 
மன்னார்குடி ஒரு நகரத்திற்கு சற்றும் குறைவின்றி எல்லா வசதிகளுடன், கிராமிய மணத்துடன் இருக்கும் ஒரு திருவாரூர் மாவட்ட ஊர். என்னதான் திருவாரூர் என்று சொல்லிக்கொண்டாலும் மக்கள் மனதில் இன்னும் தஞ்சாவூர்தான் விருப்பமான ஊர்.
அதிகாலையில் எழுந்துவிடும் ஊர். இன்னமும் மாட்டுவண்டிகளின் ஆதிக்கம் ரோட்டில் அதிகம் இருக்கும். 
எங்கள் ஊரின் அதிசயம் ஸ்ரீ ராஜ கோபாலஸ்வாமி திருகோவில்
மன்னை கிட்டத்தட்ட முக்கிய ஊர்களுக்கு நடுவில் இருக்கின்றது. இங்கிருந்து முக்கிய ஊர்கள் கிட்டத்தட்ட 30 முதல் 40 கிமீகளுக்குள் இருக்கின்றன என்றும் சொல்லலாம். தஞ்சை, நாகை, திருவாரூர், குடந்தை, பட்டுக்கோட்டை போன்ற ஊர்கள் அருகில் உள்ளன.
“கோயில் பாதி; குளம் பாதி”...... என்ற பழமொழிக்கு சொந்தமான ஊர் மன்னார்குடிதான்

ஊர் பெயர்காரணம்:

mannargudi Rajagopala swamy’குடி’  என்றால் கன்னடத்திலும், தெலுங்கிலும் கோயில் என்று அர்த்தம். இங்கே மன்னராகிய இராஜகோபாலசுவாமி குடியிருப்பதால் ‘மன்னார்குடி’ என்ற பெயர் வந்தது.
இது தவிர, செண்பகாரண்யம், குலோத்துங்க சோழவிண்ணகரம், வாசுதேவபுரி.... என பல பெயர்கள் உண்டு.


ஸ்தல புராணம்:

குடந்தைக்கு தென்கிழக்கே செண்பகவனம் ஒன்று இருந்தது. அங்கே 1008 முனிவர்கள் தவமியற்றி வந்தனர். அவர்களுள் தலைச்சிறந்தவராக வாஹி முனி என்னும் முனிவர் இருந்தார்.அவரு ’கோபிளர்,’ ‘கோபிரளயர்’ என இரு புதல்வர்கள். இருவரும் ஸ்ரீமன் நாரயணணை நோக்கி கடுமையான தவமியற்றி வந்தனர். அவர்களுக்கு காட்சியளித்த பெருமாள், அவர்கள் துவாரகைக்கு சென்று கண்ணபிரானை தரிசித்தால் அவர்கள் விரும்பும் மோட்சம் கிடைக்கும் என்று கூறி மறைந்தார்.
அவ்ர்களும் அதன்படியே ஒவ்வொரு புண்ணிய நதிகளிலும் நீராடியவாறு துவாரகை நோக்கி பயணித்தனர். அப்படி செல்கையில் வழியில் நாரதரை சந்தித்தனர். இவர்களது பயண நோக்கத்தை அறிந்த நாரதர், துவாரகையில் கண்ணபிரான் தான் வந்த காரியத்தை முடித்துக் கொண்டு மீண்டும் விண்ணுலகம் சென்றுவிட்டதாக கூறியதைக் கேட்ட இரு சகோதரர்களும் மூர்ச்சையடைந்தனர். அவர்களது பக்தியை கண்டு பெருமகிழ்ச்சியடைந்த நாரதர், அவர்களை செண்பகாரண்யம் சென்று அங்கு ஹரித்ராநதியில் நீராடி தவம் செய்தால் கண்ணபிரானை தரிசித்து மோட்சமும் அடையலாம் என்றார்.
இதை கேட்டு ஆனந்தமடைந்த இருவரும் அவர் சொல்படி செண்பகாரண்யம் சென்று தவமிருந்தனர். அவர்களுக்கு கிருஷ்ணராக காட்சியளித்த கண்ணபிரானிடம் அவர் துவாரகையில் நடத்திய கிருஷ்ணலீலைகளை நடத்தி காட்ட சொல்லி வேண்டினர். அதனால் கிருஷ்ணாவதாரதில் தொடங்கி, கீதோபதேசம் வரையிலான 32 லீலைகளையும் நடத்திக் காட்டினார் கண்ணபிரான்.
கிருஷ்ணரின் பெற்றோர் வாசுதேவர், தேவகி. இவ்விருவரையும் கம்சன் சிறையில் அடைத்தபோது பெருமாள் அவர்கள் முன்பு தோன்றி, தானே அவர்களுக்கு பிள்ளையாக பிறக்கப்போவதாக கூறினார். இதுவே அவரது முதல் லீலை. தனது லீலைகளை காண விரும்பிய கோபிலர்,
கோபிரளயருக்கு முதலில் வாசுதேவராக காட்சி தந்தார். 32ம் லீலையாக கோகுலத்தில் பசுக்கள் மேய்க்கும் இடையனாக காட்சி தந்தார். இந்நிகழ்வின் அடிப்படையில் இக்கோயிலில் மூலவர் "வாசுதேவர்' என்ற பெயரிலும், உற்சவமூர்த்தி ராஜகோபாலசுவாமியாகவும் காட்சி தருகிறார்.
தினமும் காலையில் வாசுதேவர் சன்னதி திறக்கும்போது பசு, யானைக்கு பூஜை செய்யப்படுகிறது. உற்சவருக்கு ராஜமன்னார் என்றும் பெயர் உண்டு. இப்பெயரே பிரசித்தி பெற்றதால்,
ஊருக்கும் "ராஜமன்னார்குடி' என்ற பெயர் ஏற்பட்டது.

ராஜகோபாலர் இக்கோயிலில் இடையன் கோலத்தில் பாலகனாக காட்சி தருகிறார். ஒரு வேஷ்டி அணிந்து அதையே தலைப்பாகையாக சுருட்டி,
வலது கையில் வெண்ணெய் மற்றும் சாட்டை வைத்து காட்சி தருகிறார். இடுப்பில் சலங்கை, சாவிக்கொத்து, கையில் வளையல், காலில் தண்டை,
கொலுசு ஆகிய "குழந்தை' அணிகலன்கள் அணிந்திருக்கிறார். உடன் ஒரு பசுவும், இரண்டு கன்றுகளும் உள்ளன. கிருஷ்ண, பலராமரை அழிக்க கம்சன்
குவலயாபீடம் என்னும் யானையை ஏவிவிட்டான். கிருஷ்ணன், யானையின் தந்தத்தை ஒடித்து அதனை அடக்கினார்.
இதன் அடிப்படையில் இவர் இடது கையில் தந்தமும் இருக்கிறது.

ஒருசமயம் கிருஷ்ணன், யமுனையில் நீராடிக்கொண்டிருந்த கோபியருக்கு இடையே ஒரு போட்டி வைத்தார். கோபியர் நீராடிவிட்டு தங்களது ஆடை,
ஆபரணங்களை சரியாக அணிந்து கொள்ள வேண்டும் என்பதே போட்டி! போட்டி துவங்கியதும், கிருஷ்ணர், ஒரு கோபியின் தாடங்கத்தை (காதணி)
எடுத்து அணிந்து கொண்டார். கோபியர்களோ அதைக் கவனிக்காமல் தேடிக் கொண்டே இருந்தனர். இறுதியில் கண்ணனின் காதில் அது இருக்கும்
அழகைப் பார்த்து நகைத்து, ஆனந்தம் கொண்டனர். இதன் அடிப்படையில் இங்கு ராஜகோபாலர் வலது காதில் குண்டலமும், இடது காதில் தாடங்கமும் அணிந்திருக்கிறார்.

32 லீலைகளில் கோபியருடன் ஜலக்ரீடை ஆடியதும் ஒன்று. அப்பொழுது கோபியர் பூசியிருந்த மஞ்சள், நதி நீரில் கலந்ததால்தான் ஹரித்ரா (மஞ்சள்) நதியென்ற பெயர் வந்ததாம்.

கோயில் வரலாறு:

இக்கோயிலின் வரலாற்று பெருமையை நாம் அறிய 1000 வருடங்கள் பின்னோக்கி செல்ல வேண்டும். இக்கோயில் ராஜேந்திர சோழனின் மகன் இராஜாதிராஜ சோழனால்
கட்டப் பட்டது.  அப்பொழுது ’இராஜாதிராஜ விண்ணகரம்’ என்று அழைக்கப்பட்டது. பின்னர் 100 ஆண்டுகள் கழித்து குலோத்துங்க சோழனால் இக்கோயில் புதுப்பிக்கப்பட்டது. இப்பொழுது இருக்கும் உட்பிரகாரம் குலோத்துங்க சோழன் காலத்தில் கட்டப்பட்டதால் இவ்வூருக்கு ’குலோத்துங்க சோழ விண்ணகரம்’
என்ற பெயரும் உண்டு.

பிறகு 16. நூற்றாண்டின் முடிவில் நாயக்கர்களின் ஆட்சிக் காலத்தில் இக்கோயில் மீண்டும் சிறப்போடு விளங்கியது. அச்சுதப்ப நாயக்கர்
என்பவரால் கருட த்வஜ ஸ்தம்பம் கட்டப் பட்டது. பின்னர் கி.பி. 1633 - 1673 ம் ஆண்டுகளில் விஜயராகவ நாயக்கரின் ஆட்சிக் காலத்தில்
வெளியே இருக்கும் பெரிய இராஜகோபுரம், ஆயிரங்கால் மண்டபம் போன்றவைக் கட்டப்பட்டது.ஸ்ரீ இராஜகோபாலசுவாமியையே தனது
குல தெய்வமாக கருதிய விஜயராகவ நாயக்கர் ‘மன்னாரு தாசன்’ என்றே அழைக்கப்பட்டார். நாட்டியம், நாடகம் போன்ற கலைகளில்
ஆர்வமுடைய விஜயராகவ நாயக்கர், தான் தெலுங்கில் இயற்றிய படைப்புகளை ஸ்ரீ இராஜகோபாலசுவாமிக்கே சமர்ப்பித்தார். அது மட்டுமின்றி
அவர் இயற்றிய பல நாடகங்களும் இந்த கோயிலின் ஆயிரம்கால் மண்டபத்திலேயே அரங்கேற்றப் பட்டது.

விஜயராகவ நாயக்கரின் ஆட்சிக் காலத்தில் இக்கோயிலுக்கு பல கோபுரங்களும், மண்டபங்களும், குளங்களும் கட்டியதால், இன்றும்
இக்கோயிலில் இராப்பத்து, பகல்பத்து உற்சவத்தின்போது ஸ்ரீ இராஜகோபாலசுவாமிக்கு விஜயராகவ நாயக்கரின் அலங்காரம் செய்து, அவரது
பெயரை கூவி கட்டியம் கூறுகின்றனர்.


உற்சவம்:

மன்னார்குடியில் ஆண்டின் 12
மாதங்களிலும் உற்சவம் நடக்கும்.



சித்திரை மாதம் - ‘கோடை உற்சவம்’- 10 நாட்கள்
வைகாசி மாதம் - ’ வசந்த உற்சவம்’ - 10 நாட்கள், 10ம் நாள் பெளர்ணமியன்று கருட வாகனம் இத்தலத்தின் சிறப்பு
ஆனி மாதம் - ‘தெப்போற்சவம்’ - 10 நாட்கள், 10ம் நாள் பெளர்ணமியன்று ஹரித்ராநதி குளத்தில் தெப்பம் நடைப்பெறும்.
ஆடி மாதம் - ‘ஆடிப்பூரம்’- 10 நாட்கள். செங்கமலத் தாயாருக்கு ஜேஷ்டாபிஷேகம் நடைப் பெறும்.
ஆவணி மாதம் -’ பவித்ரோற்சவம்’ - 10 நாட்கள்.
புரட்டாசி மாதம் - ’நவராத்திரி’ - 10 நாட்கள்.
ஐப்பசி மாதம் - கோலாட்ட உற்சவமும் தீபாவளி உற்சவமும் கொண்டாடப் படும்
கார்த்திகை மாதம்- சொக்கப் பானையுடன் கார்த்திகை உற்சவம்
மார்கழி மாதம் - ’அத்யயன உற்சவம்’ - 20 நாட்கள்.இராப்பத்து, பகல் பத்து உற்சவம்.
தை மாதம் - ‘பொங்கல் உற்சவம்’- 10 நாட்கள், தாயாருக்கும் உற்சவம் நடைப்பெறும்
மாசி மாதம் - ‘டோலோற்சவம்’ -10 நாட்கள்
பங்குனி மாதம் - ’பிரம்மோற்சவம்’ - 18 நாட்கள்.

புராண சிறப்பும், வரலாற்று சிறப்பும் கொண்ட மன்னார்குடிக்கு,பல முக்கிய ஊர்களிலிருந்தும் நேரடியாக பேருந்து வசதி உள்ளன. திருவாரூர்,
கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை போன்ற ஊர்களிலிருந்தும் சாலை வழியாக சென்றடையலாம். மன்னார்குடியின் அருகாமையிலுள்ள
ரயில் நிலையம் நீடாமங்கலம். இது 12கிமீ தொலைவில் உள்ளது.

மூலவர்: வாசுதேவப்பெருமாள்; தாயார்: செங்கமலத்தாயார்; உற்சவர்: ராஜகோபாலர்; தலவிருட்சம்: செண்பகமரம்;
தீர்த்தம்: 9 தீர்த்தங்கள்; ஆகமம்: பாஞ்சராத்ரம்; விமானம்: சுயம்பு விமானம்; புராணபெயர்: ராஜமன்னார்குடி;
ஊர்: மன்னார்குடி; மாவட்டம்: திருவாரூர்
நடை திறப்பு: காலை 6.30 - 12, மாலை 4.30 - 9 மணி.

மன்னார்குடியில் ஓரிரவு தங்கினால் ஒரு கோடியாண்டுகள் தவமியற்றியதற்கு சமம் என்கிறார்கள். இன்னும் நிறைய இருக்கு அடுத்த பதிவுல எழுதிருவோம்..
அப்ப கண்டிப்பா எங்க ஊருக்கு வாங்க அப்படியே 
மறக்கம ஒட்டு போடுங்க

செவ்வாய், 8 டிசம்பர், 2009

நீங்கள் அனுப்பிய மின்னஞ்சல் வாசிக்கப்பட்டாதா இல்லையா என்று அறிவது எப்படி



சில சந்தர்பங்களில் நாம் அனுப்பிய மின்னஞ்சல் திறந்து படிக்கப்பட்டதா அல்லது படிக்கப்படவில்லையா என்று அறிய வேண்டிய அவசியத்தில் இருப்போம் அவ்வாறு அறிவதற்கு உதவுவது தான் SpyPic என்ற இந்த இணையத்தளம். இது ஒரு இலவச சேவையாகும்.
இதன்
மூலம் நாம் அனுப்பும் மின்னஞ்சலை எந்த நாட்டில் இருந்து எத்தனை மணிக்குப்
படிக்கிறார், எத்தனை தரம் படிக்கிறார். அவர் மின்னஞ்சலை படிக்கும்
கணணியின் IP Address போன்ற தகவல்களை இந்த இணையத்தளம் உடனுக்குடன் எமக்குத்
தெரியப்படுத்தும்.

இதற்கு
நீங்கள் செய்யவேண்டியது மின்னஞ்சலை எழுதி முடிந்தவுடன் இந்த
இணையத்தளத்துக்கு சென்று உங்கள் மினஞ்சல் முகவரியையும் உங்கள்
மின்னஞ்சலுக்கான தலைப்பையும் கொடுக்க வேண்டும்

பின் Select your SpyPig tracking image என்ற இடத்தில் உள்ள எதாவது ஒரு படத்தினை தெரிவு செய்து Number of notifications to receive என்ற இடத்தில் உங்களுக்கு மின்னஞ்சல் பெறுபவர் எத்தனை முறை உங்கள்
மின்னஞ்சலைப் படிக்கும் போது உங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதனையும் தெரிவு செய்யவும்

பின் கீழ் உள்ள click to activate my spypic என்ற
Button ஐக் click செய்யவும் அப்போது கீழ் உள்ள பெடடியில் நீங்கள் தெரிவு
செய்த படம் தோன்றும் அந்த படத்தினை ஒரு நிமிடத்துக்குள் Copy செய்து
நீங்கள் அனுப்பும் மின்னஞ்சலில் ஏதாவது ஒரு இடத்தில் paste செய்து அந்த
மின்னஞ்சலை சாதரண மின்னஞ்சல் போல் அனுப்பவும். அந்த மின்னஞ்சல் திறந்து
படிக்கும் போது உங்களுக்கு தகவல் அனுப்பப்படும்.

தள முகவரி : http://www.spypig.com/