பக்கங்கள்

திங்கள், 30 நவம்பர், 2009

காதலாகிப் பேசுகிறேன்..





நீ
கவலைப்படுகிறாய்!
இப்போது பார்
கவலைகளுக்கும்
கவலை
பிடித்துவிட்டது...


சேமித்து
வைத்த
என் சின்ன
சின்ன
கவிதைகள் கூட
என்னைப்
பார்த்துச்
சிரிக்கின்றன...
உனக்குப்
பிடிக்காதவை
எல்லாம்
எப்படிக்
காவிதையாகும்
என்று...


உனக்கு
பிடிக்கும்
என்பதால்
எனக்குப்
பிடித்தது
ஏராளம்..
உனக்குப்
பிடிக்காது
என்பதால்
எனக்குப்
பிடிக்காததும்
ஏராளாம்
என்னையும்
சேர்த்து..


ஒற்றை
உரசலில்தான்
பற்றிக் கொள்கிறது
காதலும்
தீக்குச்சியும்
எல்லோரையும்
இறுதியில்
சாம்பலாக்கிவிட ...

கருத்துகள் இல்லை: